search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Forum"

    • மாநில அளவில் 100 கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • மன்ற செயல்பாடுகளில் எவ்வித அரசியல் சார்ந்த தலையீடுகள் இருக்க கூடாது.

    தாராபுரம்:

    கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு 2022-23 தமிழ் வளர்ச்சி துறை மானியக்கோரிக்கையின் படி அரசு கல்லூரிகளில் மாணவர் தமிழ் மன்றம் துவக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    இதற்காக மாநில அளவில் 100 கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கல்லூரிகளுக்கு 5 லட்சம் வீதம் வைப்பு நிதியாக வழங்க 5 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிதியின் வாயிலாக கிடைக்கும் வட்டியை பயன்படுத்தி கல்லூரிகளில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் ஆண்டுதோறும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டில் வைப்பு நிதியில் வட்டி கிடைக்காது என்பதால் போட்டிகள் நடத்த 36 லட்சம் ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர் தமிழ் மன்றம் செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு செலவினங்களுக்கு பயன்படுத்த கூடாது.

    மாணவர் மன்ற போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்க பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் மாணவர்கள் தமிழ் வளர்ச்சித்துறை நடத்தும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, அரசு கல்லூரி முதல்வர் ஒருவர் கூறுகையில்,அரசு கல்லூரிகளில் தமிழ்த்துறை மட்டுமின்றி அனைத்து துறை சார்ந்த மன்றங்கள் உள்ளன. புதிதாக தமிழ் மன்றம் துவக்குவதால் மாற்றங்கள் ஏதும் அதில் இருக்க போவதில்லை. மாணவர்கள் சிலர் கட்சி சார்ந்த சாராத அமைப்புகளில் இருக்கின்றனர். இவர்கள் மன்ற செயல்பாடுகளை திசை திருப்ப வாய்ப்புள்ளது. மன்ற செயல்பாடுகளில் எவ்வித அரசியல் சார்ந்த தலையீடுகள் இருக்க கூடாது.

    மன்ற செயல்பாடுகளுக்கு தெளிவான விதிமுறைகளையும் வகுக்க வேண்டியது அவசியம் என்றார்.

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்ற தொடக்க விழா நடந்தது.
    • மாணவர்கள் 135 குறள் ஒப்புவித்தல், நவீன நாடகம், பெருஞ்சலங்கை ஆட்டம். சலங்கை ஆட்டம், ஒயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.

    அவினாசி:

    அவினாசியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்ற தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ஜோ.நளதம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், கல்லூரி தமிழ்த் துறை தலைவர் மணிவண்ணன் வரவேற்றார். ச.கண்ணப்பன் வாழ்த்துரையாற்றினார்.

    திரைப்பட இயக்குனர் ராசி அழகப்பன் தமிழ்மன்றத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். மாணவர்கள் 135 குறள் ஒப்புவித்தல், நவீன நாடகம், பெருஞ்சலங்கை ஆட்டம். சலங்கை ஆட்டம், ஒயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.

    இதில் கல்லூரி பேராசியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து பல்வேறு பாட இணைச் செயல்பாடுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.
    • அதன் ஒரு பகுதியாக தமிழ் மொழியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த தமிழ் கூடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    சேலம்:

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து பல்வேறு பாட இணைச் செயல்பாடுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழ் மொழியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த தமிழ் கூடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    இதனிடையே தமிழ்நாடு முழுவதும் உள்ள 6,218 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றத்தை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்காக ஆண்டு ேதாறும் பள்ளி ஒன்றுக்கு ரூ.9 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்தது.

    தொடர்ந்து இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அதற்கான செலவின நிதியை மாவட்ட வாரியாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் 291 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்காக ரூ.26.19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறுகை யில், இந்த நிதியினை ெகாண்டு தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடத்த ஒவ்வொரு பள்ளியிலும் பணியாற்றும் முதுநிலை தமிழாசிரியர் ஒருவரை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடத்தப் பெறுவதை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

    எக்காரணத்தை கொண்டும் அத்தொகை யினை பிற இனங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டமைக்கான செலவின விவரங்களையும், பயனீட்டு சான்றிதழையும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்ப வேண்டும், என்றனர்.

    ×