என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய வானிலை ஆய்வு மையம்"
- தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழ்நாட்டுக்கு அதிக மழை பொழிவு காணப்படும்.
- இந்த ஆண்டு ‘எல் நினோ’ போன்ற சூழல் ஏற்பட வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
புதுடெல்லி:
தமிழ்நாட்டுக்கு வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை மூலம் கணிசமான அளவுக்கு மழை நீர் கிடைத்து வருகிறது.
பொதுவாக ஜூன் மாதம் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். அக்டோபர் மாதம் வரை இந்த பருவமழை நீடிக்கும். அதன் பிறகு வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும்.
தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழ்நாட்டுக்கு அதிக மழை பொழிவு காணப்படும்.
இந்த இரு பருவமழையும் பெரும்பாலும் குறிப்பிட்ட நாட்களில் தொடங்கி விடும். சில ஆண்டுகளில் பருவமழை முன்னதாகவே தொடங்கி விடுவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சுமார் ஒரு வாரம் முன்னதாக தொடங்கும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்திருந்தது. இப்போது அதில் இருந்தும் 4 நாட்கள் முன்னதாக தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 25-ந்தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கணிப்பின்படி கேரளத்தில் பருவமழை தொடங்கினால், கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு மிக முன்கூட்டியே தொடங்கும் பருவமழை இதுவாக இருக்கும். அந்த ஆண்டில் பருவமழை மே 23-ந்தேதி தொடங்கியது.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மே மாதம் 30-ந் தேதி தொடங்கியது. 2023-ம் ஆண்டு சற்று தாமதமாக ஜூன் 8-ந்தேதிதான் பருவமழை தொடங்கியது. 2022-ம் ஆண்டும் வழக்கத்தை விட 3 நாட்கள் பின்தங்கி ஜூன் 3-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
2021-ம் ஆண்டு மிகச் சரியாக ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தற்போது ஒரு வாரம் முன்னதாக தென்மேற்கு பருவமழை வர இருக்கிறது. இதனால் கோடை வெப்பம் விரைவில் முழுமையாக தணிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த ஆண்டு 'எல் நினோ' போன்ற சூழல் ஏற்பட வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
தென்மேற்குப் பருவமழையின் 50 ஆண்டுகால சராசரி மழைப்பொழிவு 87 செ.மீ. ஆகும். 96 முதல் 104 சதவீத மழைப்பொழிவு வழக்கமான மழை என்று கருதப்படும்.
105 முதல் 110 சதவீதம் வரை மழை பெய்து இருந்தால் அது 'வழக்கத்தை விட அதிகம் என்று சொல்வார்கள். 110 சதவீதத்துக்கு மேல் மழைப்பொழிவு இருந்தால் அந்த பருவமழையை 'உபரி' என்று வகைப்படுத்துவார்கள். இந்த ஆண்டு இந்த வகைகளில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் கூடுதல் மழை பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- தமிழகத்தில் வரும் 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் 23, 24, 25 ஆகிய தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை:
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வரும் 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும். தமிழகத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் 23, 24, 25 ஆகிய தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றைய தினம் கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டெல்லியில் பல வாரங்களாக நிலவும் கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில் இன்று சில பகுதிகளில் மழை பெய்தது.
- அரியானா மாநிலம் குருகிராமில் மழை பெய்துள்ளது.
புதுடெல்லி:
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெப்ப அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது.
பல இடங்களில் நேற்று இயல்பு நிலையை விட 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகி இருந்து. இரவு நேரங்களிலும் வெப்பக் காற்று வீசி வருவதால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஜூன் 18-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் பல வாரங்களாக நிலவும் கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில் இன்று சில பகுதிகளில் மழை பெய்தது. ஆர்.கே.புரம் பகுதியில் மழை பெய்தது. அரியானா மாநிலம் குருகிராமிலும் மழை பெய்துள்ளது.
டெல்லியில் இன்று காலை முதலே ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸாக இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற்பகலில் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






