என் மலர்
நீங்கள் தேடியது "surrender"
- மதுரையை சேர்ந்த கார்த்திக் தீபாவளி சீட்டு பிடித்து வந்தார்.
- தீபாவளி சீட்டு பணத்தில் ரூ.3 லட்சத்தை மகன் கார்த்திக்கிடம் இருந்து அவரது தந்தை லோகநாதன் வாங்கியிருந்தார்.
மதுரை, அக்.16-
மதுரை வில்லாபுரம் பகுதியில் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அப்பள கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். லோகநாதனுக்கு கார்த்திக் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் கூட்டுக்குடித்தனமாக வசித்து வந்தனர்.
சமீபத்தில் கார்த்திக் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கார்த்திக் தீபாவளி சீட்டு பிடித்து வந்தார். இதற்காக அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோரிடம் பணம் வசூலித்து வங்கிக் கணக்கில் சேமித்து வைத்திருந்தார். அதனை தீபாவளி பண்டிகையின் பணம் வசூலித்தவர்களுக்கு பலகாரம், பரிசுப்பொருள் மற்றும் வட்டியுடன் கொடுக்க திட்டமிட்டு இருந்தார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீபாவளி சீட்டு பணத்தில் ரூ.3 லட்சத்தை மகன் கார்த்திக்கிடம் இருந்து அவரது தந்தை லோகநாதன் வாங்கியிருந்தார். தீபாவளிக்கு முன்னதாக அந்த பணத்தை திருப்பி தந்துவிடுவதாகவும் அவர் உறுதியளித்து இருந்தார். ஆனால் தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்போது வரை லோகநாதன் ரூ.3 லட்சத்தை திருப்பித்தரவில்லை.
இதுதொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு அந்த பணத்தை கார்த்திக் தந்தையிடம் கேட்டபோது மீண்டும் தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக், தந்தை என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லோகநாதனை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
பின்னர் அவர் நேராக அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கொலையுண்ட லோகநாதன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கார்த்திக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீபாவளி சீட்டு பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பித்தராத தந்தையை மகனே கழுத்தை அறுத்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
- கொலை நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
- 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் குப்பனூர் வெள்ளியம்பட்டியை சேர்ந்தவர் பட்டறை சரவணன் (45) இவர் நேற்று முன்தினம் வெள்ளாளகுண்டம் பகுதியில் உள்ள தனது பீரோ பட்டறைக்கு காரில் சென்றார். அப்போது அயோத்தியாபட்டணம் அடுத்த அரூர் மெயின்ரோடு பனங்காடு பகுதியில் சென்றபோது மற்றொரு கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் சரவணன் ஓட்டி வந்த கார் மீது மோதி நின்றது.
பின்னர் அந்த கும்பல் காரில் இருந்து சரவணனை வெளியே இறக்கி கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது பற்றி தெரியவந்ததும் காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட சரவணன் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட காட்டூர் ஆனந்தன் கொலையாளிகளுக்கு பட்டறை சரவணன் பண உதவி செய்ததும், இதனால் பழிக்கு பழியாக காட்டூர் ஆனந்தனின் மைத்துனர் கார்த்திக் தலைமையிலான கும்பல் சரவணனை கொலை செய்ததும் தெரியவந்தது.
மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 7 பேர் கும்பல் சரவணனை வெட்டி கொலை செய்தது பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பட்டறை சரவணன் கொலை வழக்கு தொடர்பாக காட்டூர் ஆனந்தனின் மனைவி சத்யா (38), அவரது மற்றொரு தம்பி கணேஷ் (30), பொன்னமா
பேட்டையை சேர்ந்த ஜீவன்ராஜ் (24), கருப்பூரை சேர்ந்த சாரதி (21), சூர்யா (25), காமலாபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (28), மற்றும் ஆனந்தராஜ் ஆகிய 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இவர்கள் பட்டறை சரவணனை தீர்த்து கட்டுவதற்கு ஒன்று சேர்ந்து திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆனந்தனின் மைத்துனர் கார்த்திக் உள்பட மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இதில் மேலும் 10 பேர் காரிப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
முன்னதாக கைதான 7 பேரையும் போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசாருக்கும் அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.






