search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 Person Arrest"

    கூடங்குளத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 32).

    இவரும், அதே பகுதியை சேர்ந்த பால்துரை (55) என்பவரும் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கூடங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  

    அதன்பேரில் போலீசார் அவர்களிடம் சோதனை செய்தனர்.

    அப்போது புகையிலை பொருட்களை பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

     இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 100 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    ×