என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்காடி கட்டிடம்"

    • நிகழ்ச்சிக்கு கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா தலைமை வகித்தார்.
    • திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாளர் காளிதாஸ் நன்றி கூறினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 21-22 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் கொரடாச்சேரி ஔவையார் நகரில் ரூ14.65 லட்சம் மதிப்பில் புதிய அங்காடி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா தலைமை வகித்தார்.

    கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்தர், பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதிய கட்டிடத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள், பேரூராட்சி துணைத் தலைவர் தளபதி, பேரூராட்சி திமுக செயலாளர் கலைவேந்தன், வார்டு கவுன்சிலர் சத்தியபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பேரூராட்சி செயலாளர் நாராயணமூர்த்தி வரவேற்றார். இறுதியில் திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாளர் காளிதாஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சியை தொடர்ந்து அங்காடி வளாகத்தில் புதிய மரக்கன்றுகளை பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ நட்டார்.

    நாகப்பட்டினம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டபணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம், கீழ்வேளுர், கீழையூர் மற்றும் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

     ஐநல்லூர் ஊராட்சி சவேரியார் கோவில் சுனாமி குடியிருப்பு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் ரூ.11.62 லட்சம் மதிப்பீட்டில் செல்லூர், ஆவராணி, வடுகச்சேரி ஆகிய ஊராட்சி பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிகளையும், அந்தண பேட்டை ஊராட்சியில் ரூ.23.56 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியினையும், சிக்கல் ஊராட்சியில் ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டுமான பணிகளையும், சிங்கநெரி தோட்டத்தில் ரூ.8.87லட்சம் மதிப்பீட்டில் அமுத குளம் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    மேலும் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் இருக்கை ஊராட்சியில் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியினையும், நூலகம் கட்டிடம் பழுது நீக்கம் செய்யப்பட்ட பணியினையும், இரிஞ்யூர் அங்காடி கட்டிடம் கட்டும் பணியினையும், 75 அனக்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.50.லட்சம் மதிப்பீட்டில் வாய்க்கால் தூர்வாரும் பணியினையும், புதிய அங்காடி கட்டும் பணியினையும், 

    அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிகளையும், 75 அனக்குடி, வலிவலம் புதிய அமுத குளம் அமைக்கும் பணி உள்ளிட்ட ஏராளமான பணிகளை  ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர்.பசுபதி, பேபி உதவி செயற்பொறியாளர், நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், ராஜாராமன், கீழ்வேளுர் வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், ராஜகோபால், கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றி, தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×