என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை வாலிபர் பலி"

    • விக்னேசின் உடல் சொந்த ஊருக்கு வர 1 வாரம் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.
    • கொள்ளையர்கள் அங்கிருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றனர்.

    நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் புளியந்தோப்பு நடுத்தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் விக்னேஷ் (வயது 31). பட்டதாரியான இவர் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ஜமைக்கா நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்தார்.

    நேற்று அதிகாலையில் அந்த சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை கும்பல் புகுந்த நடத்திய தாக்குதலில் விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் செல்போனில் விக்னேஷ் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விக்னேஷ் உடலை பத்திரமாக நெல்லைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் தச்சை பகுதி தி.மு.க. செயலாளர் தச்சை சுப்பிரமணியன் தலைமையில் வந்து கலெக்டர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர்.

    மேலும் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் சுதா மூர்த்தி உள்ளிட்டோரும் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.


    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் அவரது உடலை நெல்லைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேசின் உடல் சொந்த ஊருக்கு வர 1 வாரம் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.

    இதனிடையே ஜமைக்கா சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து கொள்ளை கும்பலை போலீசார் தேடி வரும் நிலையில், அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அந்த காட்சியில், சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பெண்மணி பொருட்கள் வாங்கி கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு திடீரென 3 பேர் கும்பல் துப்பாக்கியுடன் புகுந்துள்ளது.

    முகமூடி அணிந்தபடி வந்த அந்த கும்பலை பார்த்ததும், கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த விக்னேஷ் உள்ளிட்ட 3 பேரும், அந்த பெண்மணியும் தரையில் குனிந்தபடி நிற்கின்றனர். உடனே கொள்ளையர்கள் அங்கிருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றனர்.

    அப்போது கடை ஊழியர்களில் ஒருவரை காலிலும், மற்றொருவரை இடுப்பிலும் சுடுகின்றனர். விக்னேசையும் அந்த கும்பல் சுட்டுவிட்டு தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. தற்போது அந்த கொள்ளை கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டின் அதிர்ச்சியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


    • கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் விக்னேஷ் மீது குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • விக்னேஷ் உயிரிழந்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும் அவரது உடல் தாயகம் கொண்டு வரப்படவில்லை.

    நெல்லை:

    ஜமைக்கா நாட்டில் தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த சுபாஷ் அமிர்தராஜ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட்டில் நெல்லை சந்திப்பு மீனாட்சி புரம் புளியந்தோப்பு நடுத்தெருவை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் விக்னேஷ் (வயது 31) என்பவர் ஓராண்டுக்கு மேலாக சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் அந்நாட்டில் கடந்த மாதம் 18-ந்தேதி அதிகாலையில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் விக்னேஷ் மீது குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வேலை பார்த்த மேலும் 2 பேர் காயமடைந்தனர். இதையறிந்த அவர்களின் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    விக்னேஷின் உறவினர்கள் அவரது உடலை விரைந்து இந்தியா அனுப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தச்சை பகுதி தி.மு.க. செயலாளர் தச்சை சுப்பிரமணியன் தலைமையில் மனு அளித்தனர். எம்.பி ராபர்ட் புரூஸ் விக்னேஷின் உடல் விரைவில் தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்த நிலையில் விக்னேஷ் உயிரிழந்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும் அவரது உடல் தாயகம் கொண்டு வரப்படவில்லை. இதனால் அவரது உறவினர்கள் கடும் சோகத்தில் உள்ளனர்.

    இதுகுறித்த விக்னேஷின் உறவினர்கள் கூறுகையில், விக்னேஷின் உடலுக்கு நேற்று தான் பிரேத பரிசோதனை நிறைவு பெற்றதாக அந்நாட்டில் இருந்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து விக்னேஷின் உடல் விமானம் மூலம் தாயகம் கொண்டு வர ரூ.16 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்துள்ளார்கள். அதுதொடர்பாக பேசி வருகிறோம். அடுத்த வாரத்தில் விக்னேஷின் உடல் நெல்லைக்கு கொண்டு வரப்படும் என நம்புகிறோம் என்றனர்.

    நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட தோழிகளை காப்பாற்ற முயன்ற வாலிபர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லை:

    சென்னை போரூரை சேர்ந்தவர் அண்ணாமலை இவரது மகன் வினோத் ( வயது 24). இவர் போரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவருடன் குரோம்பேட்டையை சேர்ந்த மருதுபாண்டி மகள் பாரதி ( வயது 24), வேளச்சேரியை சேர்ந்த மருதுபாண்டி மகள் மோனிகா ( வயது 22) ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்நிலையில் வினோத் தனது அலுவலக தோழியான பாரதி, மோனிகா மற்றும் நண்பர்களுடன் நெல்லை ரஹ்மத் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தனர்.

    இன்று அதிகாலை நண்பர்கள் 6 பேரும் நெல்லை அருகன்குளத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றிற்கு குளிக்க சென்றனர்.

    அப்போது அவரது தோழிகளான பாரதி மற்றும் மோனிகா எதிர்பாராத விதமாக ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் காப்பாற்றுமாறு கத்தி கூச்சலிட்டனர். இதனை பார்த்ததும் தோழிகளை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணிய வினோத் ஆழமான பகுதிக்கு சென்று அவர்களை மீட்க முயன்றார்.

    அப்போது அவரும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். இவர்கள் ஆற்றில் தத்தளித்தப்படி இருந்ததை கண்ட அப்பகுதியில் குளிக்க சென்ற பொதுமக்கள் பார்த்து அவர்களை மீட்டனர்.

    இதில் பாரதி மற்றும் மோனிகா ஆகியோர் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் வினோத் தண்ணீரில் மூழ்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாழையூத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×