என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 218302"

    தேர்வு எழுதாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
    தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில், சுமார் 6.70 லட்சம்  மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. 10-ம் வகுப்பு தேர்வில் மட்டும் 2.25 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உறுதிப்படுத்தினார்.

    இந்நிலையில், தேர்வு எழுதாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

    அதில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மறுதேர்வில் பங்கேற்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல், 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களும் மறுதேர்வு எழுத நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படியுங்கள்.. சட்டம், ஒழுங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்
    வைரஸ் காய்ச்சலால் பிளஸ்-1 தேர்வில் 3 பாடங்களில் தோல்வியடைந்த சென்னை மாணவியை மறுதேர்வு எழுத ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    சென்னை:

    சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பாலபவன் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-1 படித்த ஷாரோன் நிவேதிதா என்பவரின் தந்தை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எனது மகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் பிளஸ்-1 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் தோல்வியடைந்துவிட்டார். எனவே தோல்வியடைந்த பாடங்களில் மீண்டும் தேர்வு எழுத எனது மகளை அனுமதிப்பதுடன், அதே பள்ளியில் பிளஸ்-2 படிப்பை தொடரவும் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். பள்ளி நிர்வாகம் தரப்பில், ‘சி.பி.எஸ்.இ. விதிமுறைகளின்படி 2 பாடங்களில் தோல்வி அடைந்தால் மட்டுமே மறுதேர்வு எழுத முடியும்’ என்றும், ‘காய்ச்சலால் தான் தோல்வியடைய நேரிட்டது’ என்று மாணவி தரப்பிலும் வாதிடப்பட்டது. நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அந்த மாணவி தோல்வியடைந்த பாடங்களுக்கு நடைபெறும் மறுதேர்வுகளில் எழுத அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews
    ×