search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T-shirts"

    • லியோ படத்தை குறிப்பிடும் வகையிலான டீ-சர்ட் அணிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • அதிக அளவிலான ஆர்டர் லியோ படத்துக்கு பெறப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மூலம் விளையாட்டு போட்டி , தேர்தல் பிரசாரம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அணியக்கூடிய வகையில் டீ-சர்ட் பனியன் தயாரித்து கொடுக்கப்படுகிறது.

    தற்போது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் அணிவது போன்று, நீலநிறத்தில் தயாரிக்கப்பட்ட 'சிங்கிள் ஜெர்சி' டீ -சர்ட்களுக்கு கிராக்கி அதிகமாகி உள்ளது. 'இந்தியா' மற்றும் வீரர்களின் பெயர் பிரின்ட் செய்யப்பட்ட 'டீ-சர்ட்' பனியன்களை திருப்பூரில் வாங்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஆடை வர்த்தகர்கள் கூறுகையில், வழக்கத்தைவிட குறைவாக இருந்தாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து, 'டீ-சர்ட்' கேட்டு ஆர்டர்கள் வருகிறது. குறிப்பாக, 'ஆன்லைன்' விசாரணை வேகமெடுத்துள்ளது என்றனர்.

    இதேப்போல் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வருகிற 19-ந்தேதி வெளியாகிறது. இப்படம் வெளியாகும் நாளில், வரவேற்கும் விதமாக பல்வேறு ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்துள்ளனர். இந்தநிலையில் லியோ படத்தை குறிப்பிடும் வகையிலான டீ-சர்ட் அணிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதற்காக திருப்பூர் பனியன் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் வந்துள்ளது. பனியன் உற்பத்தியாளர் ஒருவர் கூறுகையில், ரஜினி நடித்த கபாலி படம் வெளியானபோது அதை சிறப்பிக்கும் வகையில், டீ-சர்ட் உற்பத்தி செய்யப்பட்டது. நம் நாடு மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் கூட அனுப்பப்பட்டது.

    அதற்கு அடுத்தபடியாக அதிக அளவிலான ஆர்டர் லியோ படத்துக்கு பெறப்பட்டுள்ளது. விஜய் நற்பணி இயக்கத்தினர், ரசிகர்கள் அதிக அளவில் இதற்கு ஆர்டர் அளித்து வாங்கியுள்ளனர். லியோ படத்தின் விஜய் போஸ்டர், அதில் இடம் பெறும் பஞ்ச் டயலாக் ஆகியன அச்சிட்ட டீ-சர்ட்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது என்றார்.

    • மாணவர்களுக்கு, ஆயத்த ஆடை தயாரிப்பு நுட்பங்கள் செயல் விளக்கங்களுடன் கற்பிக்கப்படுகிறது.
    • சாய ஆலைகளுக்கு எடுத்துச்சென்று, வண்ண சாயமேற்றியும், காம்பேக்டிங் மூலம் மெருகேற்றியுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் இணைந்து, முதலிபாளையத்தில் நிப்ட்-டீ கல்லூரியை செயல்படுத்துகின்றனர். இக்கல்லூரியில் மாணவர்களுக்கு, ஆயத்த ஆடை தயாரிப்பு நுட்பங்கள் செயல் விளக்கங்களுடன் கற்பிக்கப்படுகிறது. பி.எஸ்.சி., அப்பேரல் பேஷன் மேனேஜ்மென்ட் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் பாடத்தின் ஒரு பகுதியாக, சுயமாக ஆயத்த ஆடை ரகங்கள் தயாரித்துள்ளனர். மாணவ, மாணவிகள் 22 பேர், ஏழு குழுக்களாக பிரிந்து பின்னல் துணியில் டி-சர்ட் தயாரித்துள்ளனர்.நூல் கொள்முதல் செய்து, தர பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, கல்லூரியில் உள்ள நிட்டிங் மெஷின்களை பயன்படுத்தி, பின்னல் துணி உருவாக்கியுள்ளனர்.

    பிக்யூ, டபுள் பிக்யூ, ஹனி கோம்ப், டுவில், ஜக்கார்டு, பிளீஸ் வித் ரெய்ஸ்டு, பிளைன் இன்டர்லாக் உள்ளிட்ட நிட்டிங் டிசைன்களில் துணி உற்பத்தி செய்து, சாய ஆலைகளுக்கு எடுத்துச்சென்று, வண்ண சாயமேற்றியும், காம்பேக்டிங் மூலம் மெருகேற்றியுள்ளனர். வெவ்வேறு அளவீடுகளில் பின்னல் துணியை வெட்டி, அழகிய டி-சர்ட் தயாரித்துள்ளனர். ஆடை உற்பத்தி நிறுவனங்கள் பின்பற்றுவதுபோலவே, டி-சர்ட்களின் காலர் பகுதியில் அளவீடு லேபிள் மற்றும் ஆடையை கையாளும் விவரங்களுடன் கூடிய வாஷ்கேர் லேபிள் இணைத்து, பாலிபேக்குகளில் அடைத்து பார்வைக்கு வைத்துள்ளனர்.பேஷன் அப்பேரல் மேனேஜ்மென்ட் துறை தலைவர் கண்ணன் கூறுகையில், தாங்கள் தயாரித்த ஆடைகளின் அடக்கவிலையை மாணவர்கள் சரியாக நிர்ணயம் செய்துள்ளனர்.

    பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரியும் அனுபவம் மிக்க மெர்ச்சன்டைசர்களின் கணக்கீட்டின்படி, மொத்த ஆடை தயாரிப்புக்கு ஆகும் செலவின அடிப்படையில், விலையை ஒப்பிட்டு பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் கல்வி கற்கும்போதே ஆடை உற்பத்தி நுணுக்கங்கள், சந்தைப்படுத்துதல் குறித்து நன்கு தெரிந்துகொள்கின்றனர். எதிர்காலத்தில் பின்னலாடை உற்பத்தி தொழில்முனைவோராக மாறுவதற்கு இந்த அனுபவம் கைகொடுக்கும் என்றார்.

    ×