search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "supplies"

    • சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டி பிளஸ் தியேட்டரில் உள்ள கடைகளில் காலாவதியான சிப்ஸ் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரி களுக்கு தகவல் கிடைத்தது.
    • அப்போது காலாவதியான 2 லிட்டர் பால், தயாரிப்பு காலாவதி தேதி குறிப்பிடாத 71 கிலோ ஐஸ்கிரீம், 18 கிலோ கேக் கிலோ சிப்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது .

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டி பிளஸ் தியேட்டரில் உள்ள கடைகளில் காலாவதியான சிப்ஸ் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரி களுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்ேபரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவலிங்கம் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர் . அப்போது காலாவதியான 2 லிட்டர் பால், தயாரிப்பு காலாவதி தேதி குறிப்பிடாத 71 கிலோ ஐஸ்கிரீம், 18 கிலோ கேக் கிலோ சிப்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது .

    மேலும் தியேட்டர் நிர்வாகத்தினர் மீது உணவு பாதுகாப்பு சட்டம்- 2006 பிரிவு 52, 56, 58 -ன் படி நீதிவழி தீர்வு அலுவலரிடம் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

    ×