என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudden Missing"

    • பண்ருட்டியில் பட்டதாரி இளம்பெண் மாயமானார்.
    • படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகள் பிரியங்கா (வயது 20). இவர், வடலூரி ல் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.இவர் கடந்த 26-ந் தேதி இரவு 1.30 மணியளவில் தனது வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று அவர் காணாமல் போய்விட்டார்.

    அவரை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பட்டதாரி பெண்ணை தேடி வருகின்றனர்.

    • சந்தியா (வயது 22). இவர் திருமணமாகி கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.
    • சந்தியா குழந்தை நானிகாவுடன் கடைக்கு செல்வதாக கூறி சென்றனர். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் சுப்பைய்யாபுரம் செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜானகி. இவர்களது மகள் சந்தியா (வயது 22). இவர் திருமணமாகி கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். ஜானகியின் தாய் வீடு சேலம் கிச்சிபாளையம் சுந்தர் தெருவில் உள்ளது.

    இந்த நிலையில் ஜானகியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என வந்த தகவலையடுத்து ஜானகி மகள் சந்தியா மற்றும் பேத்தி நானிகாவுடன் சேலம் வந்தனர். அங்கு சந்தியா குழந்தை நானிகாவுடன் கடைக்கு செல்வதாக கூறி சென்றனர். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுபற்றி ஜானகி கிச்சிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தியா, அவரது குழந்தை நானிகா ஆகிய 2 பேரையும் தேடிவருகின்றனர்.

    ×