search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "subramaniya swami"

    முஸ்லிம்கள் தொழுகைக்கான அழைப்பு விடுக்க ஸ்பீக்கர்களை பயன்படுத்துவதை விமர்சித்த ராஜ் தாக்கரேவுக்கு சுப்பிரமணிய சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். #SubramaniyaSwami #RajThackeray
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் நவ்நிர்மண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, முஸ்லிம்கள் தொழுகைக்கான அழைப்பு விடுக்க ஸ்பீக்கர்களை பயன்படுத்துவது ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், தொழுகை நடத்த விரும்பினால் அவர்கள் வீட்டிலேயே தொழுதுகொள்ளட்டும் எனவும் ராஜ் தாக்ரே கூறியிருந்தார்.

    இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதுதொடர்பாக பேசிய இந்திய முஸ்லிம்கள் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினர் ஃபரூக்கி, முஸ்லிம்கள் தங்கள் தொழுகைக்கு அழைப்பு விடுக்க ஸ்பீக்கர் உபயோகிப்பதை தவறு என நினைத்தால், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் சடங்குகளையும் அவர் தடை செய்யவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.



    இந்த நிலையில், ராஜ்தாக்கரேவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, ராஜ் தாக்கரேவின் இந்த கருத்து முற்றிலும் அரசியல் நோக்கமுடையது என விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில்  முதன்மை கட்சிகளில் ஒன்றாக இருக்கும் சிவசேனாவுடன் போட்டி போடுவதை வெளிக்காட்டவே ராஜ் தாக்கரே இவ்வாறு கூறியதாக சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். #SubramaniyaSwami #RajThackeray
    ஷரியத் நீதிமன்றங்களை நிறுவ திட்டமிடுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என சுப்பிரமணியசுவாமி குறிப்பிட்டுள்ளார். #ShariatCourts #AIMPLB #SubramanianSwamy
    லக்னோ:

    நாட்டின் இஸ்லாமிய விவகாரங்கள் தொடர்பாக முடிவு எடுக்கும் உயர் அமைப்பான அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் மூத்த உறுப்பினர் ஜபர்யாப் ஜிலானி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஷரியத் நீதிமன்றங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும், இதற்கான செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சாத்தியங்கள் குறித்து ஜூலை 15-ம் தேதி டெல்லியில் நடைபெறும் மேலிட கூட்டத்தில் விவாதித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, இந்தியாவில் ஒரே நாடு ஒரே சட்டம் தான் இருக்க வேண்டும் என்றும், ஷரியத் நீதிமன்றங்கள் அமைப்பது நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாமல் வெளியில் இருந்து வரும் எதையும் ஏற்க முடியாது எனவும் அப்போது அவர் கூறியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய சுப்பிரமணிய சுவாமி, ஷரியத் நீதிமன்றங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். #ShariatCourts #AIMPLB #SubramanianSwamy
    ×