search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shariat courts"

    நாட்டில் ஷரியத் நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பாக டெல்லியில் அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. #AIMPLB
    புதுடெல்லி:

    ஷரியத் நீதிமன்றங்களின் நோக்கம் இதர நீதிமன்றங்களை அனுகாமல், ஷரியத் சட்ட திட்டப்படி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாகும். தற்போது உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் 40 ஷரியத் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதேபோல் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஷரியத் நீதிமன்றங்களை அமைக்க ஆலோசித்து வருவதாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்து இருந்தது.

    இந்நிலையில், அதற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் மூத்த உறுப்பினர் ஜபர்யாப் ஜிலானி, பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ஷரியத் நீதிமன்றங்கள் தொடர்பான விஷயத்தில் ஆலோசனை செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

    மேலும், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஷரியத் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறவில்லை எனவும், எங்கு தேவை இருக்கிறதோ அங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றே அறிவித்து இருந்ததாக குறிப்பிட்டார்.

    தொடர்ந்து பேசிய அவர், அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவதாகவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதாகவும் கூறினார். #AIMPLB
    ஷரியத் நீதிமன்றங்களை நிறுவ திட்டமிடுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என சுப்பிரமணியசுவாமி குறிப்பிட்டுள்ளார். #ShariatCourts #AIMPLB #SubramanianSwamy
    லக்னோ:

    நாட்டின் இஸ்லாமிய விவகாரங்கள் தொடர்பாக முடிவு எடுக்கும் உயர் அமைப்பான அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் மூத்த உறுப்பினர் ஜபர்யாப் ஜிலானி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஷரியத் நீதிமன்றங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும், இதற்கான செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சாத்தியங்கள் குறித்து ஜூலை 15-ம் தேதி டெல்லியில் நடைபெறும் மேலிட கூட்டத்தில் விவாதித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, இந்தியாவில் ஒரே நாடு ஒரே சட்டம் தான் இருக்க வேண்டும் என்றும், ஷரியத் நீதிமன்றங்கள் அமைப்பது நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாமல் வெளியில் இருந்து வரும் எதையும் ஏற்க முடியாது எனவும் அப்போது அவர் கூறியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய சுப்பிரமணிய சுவாமி, ஷரியத் நீதிமன்றங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். #ShariatCourts #AIMPLB #SubramanianSwamy
    நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஷரியத் நீதிமன்றங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. #ShariatCourts #AIMPLB
    லக்னோ:

    நாட்டின் இஸ்லாமிய விவகாரங்கள் தொடர்பாக முடிவு எடுக்கும் உயர் அமைப்பான அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் மூத்த உறுப்பினர் ஜபர்யாப் ஜிலானி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    'ஷரியத் நீதிமன்றங்களின் நோக்கம் இதர நீதிமன்றங்களை அனுகாமல், ஷரியத் சட்ட திட்டப்படி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாகும். தற்போது உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் 40 ஷரியத் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதுபோன்று நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஷரியத் நீதிமன்றங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, ஒரு ஷரியத் நீதிமன்றத்தை நிர்வகிக்க 50 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

    நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஷரியத் நீதிமன்றங்களை அமைப்பதற்கான செலவினங்களை எப்படி எதிர்க்கொள்வது என்பது தொடர்பாக வரும் ஜூலை 15-ம் தேதி டெல்லியில் நடைபெறும் மேலிட கூட்டத்தில் விவாதித்து தீர்மானிக்கப்படும்.



    மேலும், ஷரியத் சட்டதிட்டங்களை கற்று ஆய்ந்து, வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும் பணியாற்றும் நபர்களை நியமிக்க குழுவும் அமைக்கப்படும். இந்த குழுவின் மூலம் சராசரி பொதுமக்களும் ஷரியத் சட்ட உதவிகளை பெறுவதற்கு தேவையான வழிவகை செய்ய டெல்லியில் நடைபெறும் மேலிட கூட்டத்தில் திட்டம் வகுக்கப்படும்.'

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #ShariatCourts #AIMPLB
    ×