என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student threatened"

    • பாலியல் தொல்லை வழக்கில் சாட்சியை மாற்றி கூறும்படி மாணவிக்கு மிரட்டல் வருகிறது.
    • இந்த சம்பவம் முதுகுளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள திருவரங்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அவருக்கு, அங்கு பணிபுரியும் ஒரு ஆசிரியர் பாலியல் ெதால்லை கொடுத்ததாக கூறப்படு கிறது. இது தொடர்பாக அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக சாட்சி கூறி இருந்தார்.

    இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் முதுகுளத்தூர் மகளிர் போலீசார், ஆசிரியருக்கு எதிராக சாட்சி கூறிய மாணவியை மிரட்டி அவரது புகாரை மாற்றி கூறும்படி வற்புறுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் முதுகுளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×