search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stroll"

    • பர மத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் மகா மாரி யம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.
    • 18 வகை யான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடை பெற்றது.

    பரமத்தி வேலூர்;

    நாமக்கல் மாவட்டம் பர மத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் மகா மாரி யம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு நேற்று மஹா மாரியம்மனுக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சா மிர்தம் உள்ளிட்ட 18 வகை யான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர் மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு காட்சி அளித்தார்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.மாலை 6 மணிக்கு மேல் உற்சவர் மகா மாரி யம்மனுக்கு அலங்காரம் நடைபெற்று. அதனைத் தொடர்ந்து மகா மாரி யம்மன் சப்பாரத்தில் திரு விதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    ×