search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Street Compaigning"

    • தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில் பொதுக் கூட்டங்கள் மற்றும் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்தப்படும்.
    • 13-ந் தேதி (திங்கட்கிழமை)மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றியத்தில் நெல்லை முத்தையா மற்றும் சங்கரன்கோவில் நகரத்தில் முரசொலி மூர்த்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம். எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70- வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில் கீழ் வரும் தேதிகளில் பொதுக் கூட்ட ங்கள் மற்றும் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்த ப்படும்.

    அதன்படி வருகிற மார்ச் 11-ந் தேதி (சனிக்கிழமை) குருவிகுளம் கிழக்கு ஒன்றியத்தில் கழகப் பேச்சா ளர் வேங்கை சந்திரசேகர் மற்றும் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய த்தில் கழகப் பேச்சாளர் சரத் பாலா ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

    வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை)குருவிகுளம் மேற்கு ஒன்றியத்தில் கழக பேச்சாளர் வேங்கை சந்திர சேகர், வாசுதேவநல்லூர் பேரூர் கழகத்தில் பேச்சாளர் சரத் பாலா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    13-ந் தேதி (திங்கட்கிழமை)மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றியத்தில் நெல்லை முத்தையா மற்றும் சங்கரன்கோவில் நகரத்தில் முரசொலி மூர்த்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை)ராயகிரி பேரூர் கழகத்தில் முரசொலி மூர்த்தி மற்றும் புளியங்குடி நகரத்தில் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    15-ந் தேதி (புதன்கிழமை) திருவேங்கடம் பேரூர் - கழக பேச்சாளர் சேலம் சுஜாதா மற்றும் மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றியத்தில் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

    16- ந் தேதி (வியாழக் கிழமை) சிவகிரி பேரூர் கழகத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கழகப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசுகிறார்.

    17-ந் தேதி (வெள்ளிக் கிழமை)குருவிகுளம் தெற்கு ஒன்றியத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கழகப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசுகிறார்.

    19-ந் தேதி (ஞாயிற்று க்கிழமை)சங்கரன்கோவில் வடக்கு ஒன்றியத்தில் கழக பேச்சாளர் ஆயிரப்பேரி முத்துவேல் கலந்துகொண்டு பேசுகிறார்.

    மேல் காணும் தேதி களில் நடைபெறும் பொது கூட்டங்கள் மற்றும் தெருமுனை பிரசார கூட்டங்களில் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலா ளர்களுடன் அந்தந்த பகுதி வார்டு மற்றும் கிளைக் நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்கி கூட்டங்களை சிறப்பாக நடத்திட வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×