search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Draupadi Amman Temple"

    • முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்களும், மாகரல் கண்டிகை கிராம பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மாகரல் கண்டிகை கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் உள்ளது. கிராம தேவதையான ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவிலில் கடந்த 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை திருவிழா நடைபெற்றது. புதன்கிழமை இரவு பொன்னியம்மன் பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    கடந்த 23-ம் தேதி வெள்ளிக்கிழமை விடியற்காலை தர்மராஜா கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சியும், காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திரெளபதி அம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழா துவங்கியது. ஞாயிற்றுக்கிழமை மாலை புனித நீர் ஆடி, காப்பு கட்டி விரதம் இருந்த கிராம மக்களை, அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊர் எல்லைக்கு சென்று கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதன் பின்னர், கோவிலின் எதிரே அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் ஒருவர் பின், ஒருவராக இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதன் பின்னர்,கோவில் வளாகத்தில் வான வேடிக்கையும், அம்மன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இன்று மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியும், தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்களும், மாகரல் கண்டிகை கிராம பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி பேரூர் மேற்கு மந்தைவெளி பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாள் மண்டலபூஜை நிறைவடைந்தது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி பேரூர் மேற்கு மந்தைவெளி பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் சிதிலமடைந்ததையடுத்து கோவில் புனரமைப்பு குழுவினர் அம்மன் அருள் வாக்குப்படி பிரபல தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ் குமாரை சந்தித்தனர்.

    இதையடுத்து டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் தலைமையில் புதிய அறக்கட்டளை தொடங்கப்பட்டு திருக்கடையூர் உலக புகழ்பெற்ற ஸ்தபதி கிருஷ்ணமூர்த்தி வசம் திருப்பணிகளை ஒப்படைத்தனர். தொடர்ந்து திருப்பணிகள் முடிக்கப்பட்டு கடந்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி கோவில் புனராவர்த்தன நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடந்தது.

    அதனைத்தொடர்ந்து தினமும் மாலை நேரங்களில் கோவிலில் மண்டல பூஜை மண்டகப்படிதாரர்கள் சார்பில் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாள் மண்டலபூஜை நிறைவடைந்தது. இைதயடுத்து சுவாமி சிலைகளுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    நிகழ்ச்சிக்கு கோவில் அறக்கட்டளை தலைவர் சூரியபிரகாசம் தலைமை தாங்கினார். முன்னதாக சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசால பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீதிரௌபதிஅம்மன் மற்றும் பரிவாரதெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    தொடர்ந்து திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவில் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

    ×