search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் பூலாம்பாடி ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
    X

    பெரம்பலூர் பூலாம்பாடி ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

    • வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி பேரூர் மேற்கு மந்தைவெளி பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாள் மண்டலபூஜை நிறைவடைந்தது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி பேரூர் மேற்கு மந்தைவெளி பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் சிதிலமடைந்ததையடுத்து கோவில் புனரமைப்பு குழுவினர் அம்மன் அருள் வாக்குப்படி பிரபல தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ் குமாரை சந்தித்தனர்.

    இதையடுத்து டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் தலைமையில் புதிய அறக்கட்டளை தொடங்கப்பட்டு திருக்கடையூர் உலக புகழ்பெற்ற ஸ்தபதி கிருஷ்ணமூர்த்தி வசம் திருப்பணிகளை ஒப்படைத்தனர். தொடர்ந்து திருப்பணிகள் முடிக்கப்பட்டு கடந்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி கோவில் புனராவர்த்தன நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடந்தது.

    அதனைத்தொடர்ந்து தினமும் மாலை நேரங்களில் கோவிலில் மண்டல பூஜை மண்டகப்படிதாரர்கள் சார்பில் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாள் மண்டலபூஜை நிறைவடைந்தது. இைதயடுத்து சுவாமி சிலைகளுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    நிகழ்ச்சிக்கு கோவில் அறக்கட்டளை தலைவர் சூரியபிரகாசம் தலைமை தாங்கினார். முன்னதாக சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசால பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீதிரௌபதிஅம்மன் மற்றும் பரிவாரதெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    தொடர்ந்து திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவில் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×