search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spicy Bonda"

    சாலையோர கையேந்தி பவன்களில் கிடைக்கும் புளிப்பும் காரமும் சேர்ந்த வடை, போண்டாவை பிரியப்பட்டு சுவைப்போர் ஏராளம்..இவைகளை நீங்கள் வீட்டிலேயே சுவையாக தயாரித்து உண்ணலாம்.
    தேவையான பொருட்கள்:

    கடலைப்பருப்பு - கால் கப்
    துவரம்பருப்பு - கால் கப்
    உளுத்தம்பருப்பு - கால் கப்
    பச்சரிசி - 1 கைப்பிடி
    காய்ந்த மிளகாய் - 3
    புளி - சிறிதளவு
    பெருங்காயம் சிறிதளவு
    தேங்காய் துருவல் - கால் கப்
    உப்பு - ருசிக்கேற்ப
    கடுகு - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - பொரித்தெடுக்க



    செய்முறை:


    பருப்பு, அரிசி வகைகளை நன்றாக கழுவி ஒன்றாக ஊறப் போடுங்கள்.

    அதனுடன் மிளகாயையும் சேர்த்து ஊறவிடுங்கள்.

    2 மணி நேரம் ஊறியதும் புளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து மாவில் கொட்டி கலந்து கொள்ளுங்கள்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொரித்து எடுக்கவும்

    புளிப்பும் காரமும் சேர்ந்து ருசியாக இருக்கும் இந்த போண்டா.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×