search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "speech contests"

    • அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
    • 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரையிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பிற்பகல் 1.30 மணி முதல் தொடங்கி நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி வருகிற 11-ந் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

    6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரையிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பிற்பகல் 1.30 மணி முதல் தொடங்கி நடைபெறும்.

    இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம் 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு என நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுள், அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

    இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

    கல்லூரி மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வழியாகவும், பள்ளி மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்கலாம் என்று மாவட்ட கலெக்டர் உமாதெரிவித்து உள்ளார். 

    • தமிழில்‌ படைப்பாற்றலையும்‌, பேச்சாற்றலையும்‌ வளர்க்கும்‌ நோக்கில்‌ ஆண்டுதோறும்‌ தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை சார்பில்‌ தமிழில்‌ கவிதை, கட்டுரை, பேச்சுப்‌ போட்டிகள்‌ நடத்தப்படுகின்றன.
    • இதில் முதல்‌, 2-ம்‌ மற்றும்‌ 3-ம்‌ பரிசுகள்‌ முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச்‌ சான்றிதழும்‌ வழங்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 11, 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே தமிழில் படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் முதல், 2-ம் மற்றும் 3-ம் பரிசுகள் முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

    இந்த போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர் சென்னையில் நடைபெறும் மாநில போட்டியில் அரசு செலவில் செல்லும் வாய்ப்பையும் பெறுவர். இந்த ஆண்டுக்கான கவிதை,

    கட்டுரை, பேச்சுப் போட்டிகள்வருகிற 27-ந்தேதி( புதன்கிழமை) காலை 9 மணிக்கு சேலம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. போட்டி நாளன்று மாணவர்கள் தங்கள் வருகையை பதிவு செய்து போட்டிகளில் கலந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் விதிமுறைகள் அனைத்து பள்ளி, க்ல்லூரிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் மூலம் அனுப்பப்பட்டு உள்ளது.

    இப்போட்டிக்கான விதிமுறைகள், போட்டியில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மட்டும் பங்கேற்கலாம். போட்டியில் கலந்து கொள்பவர்கள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரின் அனுமதி பெற்று பரிந்துரையுடன் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் மொத்தம் 3 பேரை மட்டும் தெரிவு செய்து பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர் அனுப்பி வைக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு போட்டி யில் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.

    போட்டியில் பங்கேற்கும் மாணவருக்குப் பயணப்படி வழங்கப்பட மாட்டாது. போட்டி நாளன்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். போட்டிக்கான

    தலைப்புகள் போட்டி நடைபெறும் அரங்கில் அறி விக்கப்படும். சேலம் மாவட்டத்தினர் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிட மும், கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் கல்லூரி முதல்வரிடமும் பறிந்து ரைப்பெற்று போட்டிகளில் கலந்து கொள்லலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார். 

    ×