search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special house"

    • தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாவட்டம் முழுவதும் உள்ள குறைந்த உயரம் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட செயலாளர் முத்துமணிகண்டன், கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள குறைந்த உயரம் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.பின்னர் அவர்கள் கொடுத்தமனுவில், நாங்கள் பயன்படுத்தும் வகையில் சிறப்பு வீடுகள் மற்றும் பஸ்களில் ஏறும் வகையில் படிக்கட்டுகள் அமைத்து, தாழ்வான நிலையில் டிக்கெட் கவுன்டர் உள்ளிட்டவை அமைத்து கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    ×