search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Space Problem"

    • இன்று அதிகாலை வாக்குவாதம் ஏற்பட்டது.
    • ஒருவரை ஒருவர் தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் அருகே கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 45). இவரது வீட்டருகே வசித்து வருபவர் ஆறுமுகம் (50). இருவருக்கும் இடையே சிறிய சந்து தொடர்பாக இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் லோக நாதன் தரப்பினருக்கும், ஆறுமுகம் தரப்பினரு க்குமிடையே இன்று அதிகாலை வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறி, ஒருவரை ஒருவர் தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி கொண்டனர். இதில் லோகநாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆறுமுகத்திற்கு கை மற்றும் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது.

    அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் கிளியூர் கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக வேறெதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க திருநாவலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப ட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அடிக்கடி 2 குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • ராஜேந்திரன் ஆத்திரம் அடைந்து அரிவாளால் திருஞானசம்பந்தத்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (வயது 41).

    இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    அடிக்கடி 2 குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று மண்ணியாறு கரையில் திருஞானசம்பந்தம் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு வந்த ராஜேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் ராஜேந்திரன் ஆத்திரம் அடைந்து அரிவாளால் திருஞானசம்பந்தத்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார்.

    இந்த தாக்குதலில் திருஞானசம்பந்தம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த சோழபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து திருஞானசம்பந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே சோழபுரம் போலீசாரின் அலட்சியத்தால் தான் கொலை நடந்ததாக கூறி திருஞானசம்பந்தத்தின் உறவினர்கள் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×