search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "smuggling gold seized"

    மேற்கு வங்காளம் மாநிலம் வழியாக 27 கிலோ கடத்தல் தங்கத்தை பதுக்கி கொண்டு சென்றவரை சிலிகுரி மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரிகள் கைது செய்தனர். #27kggold #smugglinggoldseized #goldseizedinsiliguri
    கொல்கத்தா:

    நேபாளம், மியான்மர், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மேற்கு வங்காளம் மாநிலம் வழியாக பெருமளவிலான தங்கம் இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுகிறது. வருவாய் துறை அதிகாரிகள் அவ்வப்போது நடத்தும் சோதனைகளில் பெருமளவில் கடத்தம் தங்கம் பிடிபடுவதும் வாடிக்கையாகி விட்டது.

    அவ்வகையில், சிலிகுரி மாவட்டம் வழியாக ஒருவர் காரில் கடத்தல் தங்கம் கொண்டு வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து நேற்று சிலிகுரி மாவட்டம் முழுவதிலும் போலீசார் துணையுடன் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, சேவோக் சாலையில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே வேகமாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர். இந்த சோதனையில் கார் சீட்டின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 27 கிலோ தங்க கட்டிகள் மற்றும் 10 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    கடத்தல் தங்கத்தை சிக்கிம் மாநிலத்துக்கு கொண்டு செல்ல முயன்ற எஸ்.டி.பூட்டியா என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். நேற்று பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் உள்நாட்டு மதிப்பு சுமார் 6 கோடியே 80 லட்சம் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #27kggold #smugglinggoldseized #goldseizedinsiliguri
    கோவையில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான 8 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். #ChennaiAirport #GoldBarsSeized
    ஆலந்தூர்:

    வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவம் அதிகரித்து உள்ளது.

    நேற்று ஒரே நாளில் 5 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.37 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கோவையில் இருந்து வந்த விமானத்தின் கழிவறையில் 8 கிலோ தங்க கட்டி சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவையில் இருந்து சென்னைக்கு நேற்று மாலை பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானம் 5 மணி அளவில் டெல்லிக்கு புறப்பட தயாரானது. மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விமானத்தில் ஏறி திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது விமானத்தின் கழிவறையில் 8 கிலோ தங்க கட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.2½ கோடியாகும். தங்க கட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



    இந்த விமானம் ஏற்கனவே துபாயில் இருந்து சென்னை வந்து இருந்தது. பின்னர் டெல்லிக்கும், கோவைக்கு சென்று விட்டு மீண்டும் சென்னை வந்தபோது தான் தங்கம் பிடிபட்டுள்ளது.

    எனவே துபாயில் இருந்து வந்தபோதே அதில் தங்கம் கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். சோதனைக்கு பயந்து கடத்தல்காரர்கள் தங்க கட்டியை விமானத்தின் கழிவறையில் மறைத்து வைத்து சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    எனினும் மற்ற நகரங்களுக்கு விமானம் புறப்படும் போது விமானத்தின் கழிவறையை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது தங்க கட்டியை கவனிக்காதது எப்படி? கடத்தல் கும்பலுடன் ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் விவரத்தை சேகரித்துள்ளனர். இதில் சந்தேகத்திற்கிடமான ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். #ChennaiAirport #GoldBarsSeized
    சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆந்திராவை சேர்ந்த கிருஷ்ணவேணி(வயது 43) என்பவர் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு வந்திருந்தார்.

    கிருஷ்ணவேணி மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள், அவரது சூட்கேசை சோதனை செய்தனர். அதில் தங்க வளையல்கள் மற்றும் தங்க சங்கிலி மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்புள்ள, 400 கிராம் தங்க நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தார்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து கிருஷ்ணவேணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் 6.3 கிலோ வெளிநாட்டு தங்கம் கடத்திவந்த இருவரை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். #foreignorigingoldbars #goldbars
    கொல்கத்தா:

    விற்பனை வரி, இறக்குமதி வரி மற்றும் சுங்கவரிகளை தவிர்ப்பதற்காக மணிப்பூர் மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மியான்மர் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரும் தொழில் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

    இந்நிலையில், மிசோரம் மாநிலத்தை சேர்ந்த இருவர் மேற்கு வங்காளம் மாநிலம், சிலிகுரி மாவட்டம் வழியாக வெளிநாட்டுக்கு தங்கம் கடத்தி செல்வதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய  தகவல் வந்தது.

    இதன் அடிப்படையில் சோதனை நடத்திய அதிகாரிகள் 6 கிலோ 300 கிராம் எடையுள்ள வெளிநாட்டு தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், மிசோரம் மாநிலத்தை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு தங்கத்தின் இந்திய மதிப்பு சுமார் ஒரு கோடியே 93 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  #foreignorigingoldbars #goldbars #Rs1.93Croresgold 
    ×