என் மலர்
நீங்கள் தேடியது "இந்தோனேசிய அதிபர்"
- முன்னாள் ராணுவ தளபதி ஆவார்.
- கடந்த அக்டோபர் மாதம் அதிபராக பொறுப்பேற்றார்.
புதுடெல்லி:
76-வது குடியரசு தின விழா வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி டெல்லி யில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். ஒவ்வொரு குடியரசு தின அணிவகுப் பிலும் வெளிநாட்டை சேர்ந்த அதிபர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வார்.
26-ந்தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் இந்தோனேசிய அதிபர் பிரபோவா கபியாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
கடந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரான் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். டெல்லி வரும் இந்தோனேசிய அதிபர் சுபி யாண்டோ பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
73 வயதான அவர் முன்னாள் ராணுவ தளபதி ஆவார். கடந்த அக்டோபர் மாதம் அவர் அதிபராக பொறுப்பேற்றார். குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வரும் இந்தோனேசியா அதிபர் இங்கிருந்து பாகிஸ்தான் செல்ல மாட்டார் என்று தெரிகிறது. அவர் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வார் என்று பாகிஸ்தான் நாட்டு ஊடகங்கள் தெரிவித்து இருந்தன.
- பிரபோவா சுபியாண்டோ முன்னாள் ராணுவ தளபதி ஆவார்.
- இவர் கடந்த அக்டோபர் மாதம் அதிபராக பொறுப்பேற்றார்.
புதுடெல்லி:
76-வது குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
ஒவ்வொரு குடியரசு தின அணிவகுப்பிலும் வெளிநாட்டைச் சேர்ந்த அதிபர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்வார்.
குடியரசு தின அணிவகுப்பில் இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
73 வயதான அவர் முன்னாள் ராணுவ தளபதி ஆவார். கடந்த அக்டோபர் மாதம் அவர் அதிபராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ நேற்று இரவு டெல்லி வந்தடைந்தார். அவரை வெளியுறவுத்துறை இணை மந்திரி பபித்ரா மார்கிரெட்டா உற்சாகமாக வரவேற்றார்.
டெல்லி வந்துள்ள இந்தோனேசிய அதிபர் சுபியாண்டோ ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பங்கேற்றார்.
- குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தோனேசிய அதிபர் வந்துள்ளார்.
- வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இந்தோனேசிய அதிபரை நேற்று சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
76-வது குடியரசு தினவிழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
ஒவ்வொரு குடியரசு தின அணிவகுப்பிலும் வெளிநாட்டைச் சேர்ந்த அதிபர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்வார்.
இதற்கிடையே, குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ டெல்லி வந்துள்ளார். அவரை வெளியுறவுத்துறை இணை மந்திரி பபித்ரா மார்கிரெட்டாவரவேற்றார். அவரது முதல் இந்திய பயணம் இதுவாகும்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நேற்று இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.
அதன்பின், குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்பது இரு நாடுகளுக்கு இடையிலான நட்பின் பொருத்தமான கொண்டாட்டமாக இருக்கும் என தெரிவித்தார்.
இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் இன்று பேச்சு நடத்த உள்ளார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், எரிசக்தி, சுற்றுலா உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
- நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தோனேசிய அதிபர் இந்தியா வந்துள்ளார்.
- அவருக்கு, ராஷ்ட்ரீய பவனில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:
நாட்டின் 76-வது குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடைபெறவுள்ள நிலையில், சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன்டோ கலந்து கொள்கிறார்.
நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அவருக்கு, ராஷ்ட்ரீய பவனில் பாரம்பரிய முறைப்படி இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், பிரதமர் மோடி மற்றும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன்டோ தலைமையில் இருநாட்டு அதிகாரிகளுடனான சந்திப்பு நடைபெற்றது. அப்போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இரு நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அவருக்கு, ராஷ்ட்ரீய பவனில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, குடியரசு தினவிழாவில் கலந்துகொள்ள வந்ததற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நன்றி தெரிவித்தார்.
ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






