என் மலர்
நீங்கள் தேடியது "பீடி இலை மூட்டைகள்"
- வாகன சோதனையில் பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை வழியாக பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையிலான போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதியில் நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திரேஸ்புரம் கடற்கரையின் வடக்கு பகுதியில் படகு பழுது சரி பார்க்கும் இடத்தில் நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற லோடு ஆட்டோவை சோதனை செய்தனர்.
அப்போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துவரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 9 பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவற்றையும், அங்கிருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட திரேஸ்புரத்தை சேர்ந்த ஆரோக்கிய ஜான்சன் (வயது 36) என்பரை கைது செய்தனர்.
மேலும் ஆரோக்கிய ஜான்சனுக்கு சொந்தமான பைபர் படகில் கடத்தலில் ஈடுபட்ட மற்றவர்கள், மீதி இருந்த பீடி இலை மூட்டைகளுடன் கடலுக்குள் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- வடபகுதியில் அதிகாலை சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்தனர்.
- கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசார் வருவதை தெரிந்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரேஸ்புரம் கடற்கரை பகுதி வழியாக பீடி இலை மூட்டைகள் இலங்கைக்கு படகு மூலம் கடத்த இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ் குமார் மற்றும் காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் கடற்கரைப் பகுதியில் நள்ளிரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திரேஸ்புரம் கடற்கரை வடபகுதியில் அதிகாலை சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அதில் 30 கிலோ எடை கொண்ட 42 பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் மினி லாரி மூலம் பீடி இலை மூட்டைகளை கொண்டு வந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்றது தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசார் வருவதை தெரிந்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






