என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள் கொலை"

    • எல்லைப்பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
    • கொல்லப்பட்டவர்களில் 3 பேர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள்

    இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லைப்பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த 5 முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் கொல்லப்பதாக கூறப்படுகிறது. மேலும் கொல்லப்பட்டவர்களில் 3 பேர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கடந்த 7-ந்தேதி இந்தியா நடத்திய தாக்குதலில் 5 பேரும் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக, இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் மற்றும் அவரது உறவினர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. பின்பு, மசூத் அசார் உயிரோடு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கொல்லப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, இந்தியாவுடனான மோதல் போக்கை பயன்படுத்தி பாகிஸ்தானில் மொத்தமாக 39 இடங்களில் பலூசிஸ்தான் போராளிக் குழுவினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். 

    • பாதுகாப்புப் படையினரை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    • இந்த என்கவுண்டரில் 2 போலீசார் வீர மரணம் அடைந்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அங்குள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததைக் கண்டறிந்தனர். பாதுகாப்புப் படையினரைப் பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலடியாக பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

    இதில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அதேபோல, மற்றொரு பகுதியில் நடந்த என்கவுண்டரிலும் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். இந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

    இந்நிலையில், குல்காம் என்கவுண்டரில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 6 ஆனது என போலீசார் தெரிவித்தனர்.

    ×