என் மலர்
நீங்கள் தேடியது "நடிகர் கார்த்திக்"
தமிழ் சினிமாவில் 1990-2000களில் வெற்றிப் படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் பாரதி கண்ணன். இவர், அருவா வேலு, திருநெல்வேலி, கண்ணாத்தா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது, சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் பாரதி கண்ணன் சமீபத்தில் பேசியபோது, நடிகர் கார்த்திக் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.
அப்போது, நடிகர் கார்த்திக் படத்தில் நடித்து தருவதாக கூறி ரூ.10 லட்சம் முன்பணம் வாங்கினார். ஆனால், தயாரிப்பாளர் கார்த்திக்கை வைத்து நாம் படம் எடுக்க வேண்டாம் என்று கூறி கொடுத்த பணத்தை திரும்ப வாங்கிவிட சொன்னார்.
ஆனால், "கார்த்திகிடம் பணம் போனால் திரும்ப வராது என திரைத்துறைக்கே தெரியும்.. உங்களுக்கு தெரியாதா" என கார்த்திக் கூறியதாக பாரதி கண்ணன் கார்த்திக் போலவே மிமிக்ரி செய்து கூறினார்.
இந்த நேர்காணல் வைரலானது. இந்த நிலையில், பாரதி கண்ணன் மீண்டும் ஒரு நேர்காணலில் பேசியபோது கார்த்து தொடர்பாக பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது பாரதி கண்ணன்," நடிகர் கார்த்திக் குறித்து நான் சாதாரணமாக தான் கூறினேன். அது இவ்வளவு பெரிய விஷயம் ஆகும் என்று நினைக்கவில்லை. அது பல ஆண்டுகள் முன்பு அனுபவித்த வலி. இப்போது அதெல்லம் மறைந்துவிட்டது.
இதுதொடர்பாக நடிகர்கள் பிரபு, ராதா ரவி ஆகியோரும் தன்னிடம் பேசி இனி கார்த்திக் பற்றி இதுபோல் பேசவேண்டாம் என்று கூறினர்.
கார்த்திக்கின் ஆதரவாளர்கள் பலரிடம் இருந்து எனக்கு மென்மையான மிரட்டல்களும் விடுத்தனர். நான் கார்ததிக் பற்றி பேசியது யாரையாவது காயப்படுத்தியிந்தால் மன்னித்துவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்" என்றார்.
- தமிழக மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழக மக்களுக்கு வர வேண்டிய நிவாரணத்தை கூட தரவில்லை.
- அ.தி.மு.க. தொண்டர்களும், பிரசாரத்தை கவனித்துக் கொண்டிருந்த பொது மக்களும், உற்சாகமாக கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
உசிலம்பட்டி:
மதுரை தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாநகர பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் தேனி தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமி ஆகியோரை ஆதரித்து இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதா வது:-
நல்லவர்களுக்கு இந்த தேர்தலில் வெற்றி பெற வாக்காளர்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் மக்களின் தேவைகளுக்கு நாடாளு மன்றத்தில் குரல் எழுப்ப முடியும். உசிலம்பட்டிக்கு வந்தாலே நான் உணர்வு பூர்வமாக ஆகிவிடுகிறேன். நான் யாரையும் குறைகூறி பிரசாரம் செய்பவன் அல்ல. கச்சத்தீவை மீட்போம் என்று கூறினார்கள். ஆனால் இது வரைக்கும் என்ன செய்தீர்கள்? வெள்ளம் வந்தபோது தமிழக மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? தமிழக மக்களுக்கு வர வேண்டிய நிவாரணத்தை கூட தரவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
தேனி பிரசாரத்தில் பேசியபோது தான் நடித்த 'அமரன்' படத்தில் சொந்தக் குரலில் பாடிய பாடலை பிரசாரத்திற்காக அதே மெட்டில் மாற்றி, 'அமரன்' பாட்ட கேட்டால் சோடா பாட்டில் அல்ல, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் பறக்கும்' என அதே மெட்டில் பாடிக் காட்டினார். இதை கேட்டு அவரது ஆதரவாளர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும், பிரசாரத்தை கவனித்துக் கொண்டிருந்த பொது மக்களும், உற்சாகமாக கை தட்டி ஆரவாரம் செய்தனர். இதனால் உற்சாகமடைந்த நடிகர் கார்த்திக்கும் மேலும் 2 வரியை பாடி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.






