என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவாதிரை பதிகம்"

    • பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
    • கோவிலில் பிரதமர் மோடிக்கு திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்படுகிறது.

    பிரதமர் மோடி தனது 4 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்த நிலையில், நேற்று மாலை தூத்துக்குடி வந்தடைந்தார்.

    அப்போது பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து விமானத்தில் இருந்து இறங்கினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    விழாவில் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடிக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி தூத்துக்குடில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். குறிப்பாக, ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வை முடித்துக்கொண்டு திருச்சி சென்ற பிரதமர் மோடி,

    தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை 11 மணிக்கு ஓட்டலில் இருந்து கார் மூலம் விமான நிலையத்திற்கு செல்கிறார்.

    செல்லும் வழியில் கண்டோன்மெண்ட், பாரதிதாசன் சாலை ஆகிய இடங்களில் மக்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பாரதிதாசன் சாலையின் ஒரு பகுதியில் ரோடு- ஷோ நடத்துவதற்கு வசதியாக இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. பின்னர் பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ரோடு ஷோவில் மக்களை சந்திக்கிறார்

    கோவிலில் பிரதமர் மோடிக்கு திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்படுகிறது. பின்னர், வாரணாசியில் இருந்து கொண்டு வரப்படும் கங்கை நீரை கொண்டு பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, சாமி தரிசனம் செய்த பின்னர் 3 நிமிடங்களுக்கு கோவிலில் அமர்ந்து தியானம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து கோவில் சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பார்வையிடுகிறார்.

    இதைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடக்கிறது. இசையை கேட்டு ரசிக்கும் பிரதமர் மோடி, பின்னர் மதியம் சுமார் 1.45 மணியளவில் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். பிற்பகல் 2.25 மணிக்கு அந்த ஹெலிகாப்டர் திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியதும், 2.30 மணிக்கு விமானம் மூலம் நேரடியாக டெல்லிக்கு புறப்படுகிறார்.

    • இதைக் கேட்போர் எல்லையற்ற ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் மந்திரச் சொற்களினால் வரும் ஆனந்தத்தையும் அடைவர்.
    • ராவணனின் கூற்றுப்படி இதைக் கேட்போர் சிறந்த சிவபக்தியைப் பெற்று சிவனின் அருளும் பெற்று வாழ்வர்

    மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று தான் சிவபெருமான் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் தன் திரு நடனத்தை ஆடிக் காண்பித்தார்.

    எல்லையற்ற விண்வெளியைக் குறிக்கும் சிதம்பரத்தில் இந்நாள் பெரும் விழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

    இந்தத் திருநடனம் உலகின் இயக்கத்தைச் சுட்டிக் காட்டும் அற்புத நடனம்.

    இறைவனின் சிவதாண்டவத்தைக் கண்டு பிரமித்துப் போன சிவபக்தனான ராவணன் சிவதாண்டவ ஸ்லோகத்தை இயற்றியுள்ளான்.

    இதைக் கேட்போர் எல்லையற்ற ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் மந்திரச் சொற்களினால் வரும் ஆனந்தத்தையும் அடைவர்.

    ராவணனின் கூற்றுப்படி இதைக் கேட்போர் சிறந்த சிவபக்தியைப் பெற்று சிவனின் அருளும் பெற்று வாழ்வர்

    இத்தகைய பெருமை கொண்ட ஆதிரை நாளை அப்பர் எப்படிப் பாடி விளக்குகிறார் என்று பாருங்கள்....

    பாடல் எண் : 1

    முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலே

    பத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னே

    வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்

    அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 2

    நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்

    பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்

    மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்கு

    அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 3

    வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள்

    சோதிகள்விட்டுச் சுடர்மாமணிகள் ஒளிதோன்றச்

    சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்

    ஆதியாரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 4

    குணங்கள்பேசிக் கூடிப்பாடித் தொண்டர்கள்

    பிணங்கித்தம்மிற் பித்தரைப்போலப் பிதற்றுவார்

    வணங்கிநின்று வானவர்வந்து வைகலும்

    அணங்கன் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 5

    நிலவெண்சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்

    பலரும்இட்ட கல்லவடங்கள் பரந்தெங்கும்

    கலவமஞ்ஞை கார்என்று எண்ணிக் களித்துவந்து

    அலமர்ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 6

    விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்

    தம்மாண்பு இலராய்த் தரியார் தலையால் முட்டுவார்

    எம்மான் ஈசன் எந்தையென் அப்பன் என்பார்கட்கு

    அம்மான்ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 7

    செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்

    மைந்தர்களோடு மங்கையர்கூடி மயங்குவார்

    இந்திரனாதி வானவர்சித்தர் எடுத்தேத்தும் அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 8

    முடிகள் வணங்கி மூவாதார் முன்செல்ல

    வடிகொள் வேய்த்தோள் வானரமங்கையர் பின்செல்லப்

    பொடிகள்பூசிப் பாடும்தொண்டர் புடைசூழ

    அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 9

    துன்பநும்மைத் தொழாதநாள்கள் என்பாரும்

    இன்பநும்மை ஏத்து நாள்கள் என்பாரும்

    நும்பின் எம்மை நுழையப்பணியே என்பாரும்

    அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    பாடல் எண் : 10

    பாரூர்பௌவத் தானைபத்தர் பணிந்தேத்தச்

    சீரூர்பாடல் ஆடல் அறாத செம்மாப்பார்ந்து

    ஓரூர் ஒழியாது உலகமெங்கும் எடுத்தேத்தும்

    ஆரூரன்றன் ஆதிரை நாளால் அது வண்ணம்.

    அனைவருக்கும் பொருள் புரியும் வண்ணம் எளிதாக அமைந்துள்ளன இப்பாடல்கள்.

    ×