என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படம் வெளியீடு"

    • 5 பாடல்களுக்கு 5 திறமையான இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள்.
    • டிஎன்ஏ படத்தின் டீசர் கடந்த ஜனவரி 10ம் தேதி படக்குழு வெளியிட்டது.

    அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

    இதற்கு முன் ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்கு 5 திறமையான இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள்.

    டிஎன்ஏ படத்தின் டீசர் கடந்த ஜனவரி 10ம் தேதி படக்குழு வெளியிட்டது.

    இந்நிலையில், டிஎன்ஏ படம் வெளியாகும் தேதியை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

    அதன்படி, டிஎன்ஏ திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • Mr Zoo Keeper யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
    • படத்தின் டிரெய்லர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது

    சின்னத்திரை பிரபலமான புகழ் பெரியத்திரையில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நிலையில், கதாநாயகனாக 'மிஸ்டர் ஜூ கீப்பர்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை ஜே. சுரேஷ் இயக்கியுள்ளார். ஜே. சுரேஷ் வேலை, என்னவளே, ஜூனியர் சீனியர் ஆகிய படங்களை இயக்கிய நிலையில், புகழ் நடிக்கும் 'மிஸ்டர் ஜூ கீப்பர்' படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இப்படத்தை ஜே 4 ஸ்டுடியோஸ் ராஜ ரத்தினம் தயாரித்துள்ளார். இப்படத்தில் அனிமேஷன் இல்லாமல், உண்மையான புலியை நடிக்க வைத்திருப்பதாகப் படக்குழு அறிவித்தனர்.

    இந்நிலையில், சின்னத்திரை நடிகர் புகழ் நாயகனாக நடித்துள்ள 'மிஸ்டர் ஜூ கீப்பர்' படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

    • 3 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
    • தற்போது வரைக்கும் பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷனில் 92 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

    கடந்த மாதம் 9-ஆம் தேதி மலையாள மொழியில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் ப்ரேமலு எனும் படம் வெளியானது.

    மாமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரமாக நடித்துள்ளனர். 3 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது வரைக்கும் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் 92 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் இப்படம் இடம்பெற்றுள்ளது. 

    சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வெகுஜன மக்களிடம் நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்தமையால் படக் குழுவினர் இப்படத்தை தெலுங்கு மொழியில் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி, வரும் மார்ச் 8-ஆம் தேதி தெலுங்கு மொழியில் இத்திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

    ×