என் மலர்
நீங்கள் தேடியது "கடையநல்லூர் விபத்து"
- கடையநல்லூர் அருகே 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
- இந்த கோர விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர்.
பஸ்கள் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் விபத்தில் பலியான 6 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
- காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதியதால் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சம்பவ இடத்திற்கு கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர்.
கடையநல்லூர்:
திருச்சியில் இருந்து சிலர் தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு ஒரு காரில் வந்தனர். காரை திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டி வந்தார்.
கார் கடையநல்லூர் அருகே அட்டைகுளம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை வந்தபோது மேலகடையநல்லூரில் இருந்து விவசாய பணிக்காக சென்ற டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேராக மோதியது.
இதில் கார் மற்றும் டிராக்டரின் முற்பகுதி நொறுங்கியது. அப்போது காரில் இறந்த பலூன் வெடித்ததால் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதேபோல் டிராக்டரை ஓட்டி வந்த சேகர் என்பவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதியதால் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர்.






