என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் பெரியாண்டவர் கோவில்"
- திருமாலை அதிகம் வணங்குவார்.
- பெரியாண்டவர் கோவிலில் இன்று பூக்குழி.
விளாத்திகுளம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெத்தனாட்சிஅம்மன் பெரியாண்டவர் திருக்கோயிலில் இன்று பூக்குழி விழா. மேல்மாந்தை ஒருங்கிணைந்த ஆட்டுக்கூட்டத்தை குறிக்கும் சொல் ஆகும். கிபி பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேலாயுதன் என்ற அரசன் திருநெல்வேலி ஜில்லாவை ஆண்டு வந்தான்.
சூரங்குடி, குளத்தூர், எப்போதும் வென்றான், குறுக்குச்சாலை, வேம்பார், மேல்மாந்தை, சண்முகாபுரம் ஆகியபகுதிகள் அவனது கட்டுப்பாட்டில் இருந்தன. வேலாயுதன் சிறந்த வீரனாகவும் காமக் கொடூரனாகவும் இருந்தான். சிறுவயதிலேயே தகப்பனை இழந்த பெத்தனாட்சி என்ற சிறுமி, அம்மாவின் கட்டளையால் தனது வறுமையின் காரணமாக அரசனின் ஆட்டுக்கொட்டகையில் வேலை செய்தார்.
சிறுவயதில் இருந்தே பெத்தனாட்சி மிகவும் அழகாக இருப்பாள். முப்பெரும் தெய்வங்களில் திருமாலை அதிகம் வணங்குவார். நெற்றியில் நாமம் பூசுவது அவளது வழக்கமாக இருக்கும். இப்படி ஒரு சமயத்தில் பெத்தனாட்சி பூப்படைந்த போது அதை அறிந்த அரசன் வீரர்களை அழைத்து மற்ற பூப்படைந்த பெண்களை இழுத்து வருவதுபோலப் பெத்தனாட்சி இழுத்து வர ஆணையிட்டான்.
அதற்கு அந்தப்புரம் வருவதற்கு பெத்தனாட்சி மறுத்து தன்மானம்தான் பெரிதென்று நினைத்து தன் உயிர் நீத்தாள். உயிர்நீத்த மறுநாளே அவள் தெய்வமாக மாறிவிட்டாள். அரசனும் பெத்தனாட்சி சாதாரண பெண்ணல்ல தெய்வ அம்சம் உடையவள் என்று நினைத்து, தான் தவறு செய்துவிட்டோமே என்று மனமுடைந்து அவனும் இறந்தான்.
அதன் பின்னர், கிராமத்தில் நோய்களும் பிணிகளும் மக்களை வாட்டி வதைத்தன. கிராம மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு கருப்பசாமியிடம் அருள்வாக்கு கேட்டனர். அதற்கு கருப்பசாமி ஊரின் தென் எல்லையில் உள்ள பெத்தனாட்சி மிகுந்த உக்கிரத்துடன் இருக்கிறாள் அவளை சாந்தப்படுத்த கோவில் கட்டி இளவேனிற் காலமான மாசி மாதாந்திர வெள்ளியன்று திருவிழா கொண்டாடினால் ஊர் மக்களை காத்தருள்வார் என்று வாக்குறுதி கொடுத்தார்.
அதுபோல, கிராம பொதுமக்கள் ஒன்றுகூடி ஊரை காத்தருளும் கிராம தேவதைக்கு கோவில் கட்டி அன்று முதல் வருடந்தோறும் மாசிமாதம் மாதாந்திர வெள்ளிக்கிழமையன்று திருவிழா கொண்டாட ஆரம்பித்தார்கள். பெத்தனாட்சி கிராம தேவதை மட்டுமில்ல மேல்மாந்தைக்கு காவல் தெய்வமாக விளங்குகிறாள்.






