என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சமுக லிங்கம்"

    • மகாகூட தூண் கல்வெட்டு, சமஸ்கிருதம் மற்றும் கன்னட எழுத்து முறையில் உள்ளது.
    • மகாகுடா' என்பதற்கு 'பெரிய குழு' என்று பொருள்.

    கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ளது, மகாகூடம் என்ற கிராமம். இங்கு கி.பி. 6 மற்றும் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முக்கியமான சைவ சமய வழிபாட்டுத் தலங்கள் அமையப் பெற்றுள்ளன. இதனை 'மகாகூடக் கோவில்கள் என்று அழைக்கிறார்கள்.

    பாதாமி நகரில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்த இந்த வழிபாட்டு தலத்தை, சாளுக்கிய வம்சத்தின் ஆரம்ப கால மன்னர்கள் கட்டியதாக கல்வெட்டு சான்றுகள் குறிட்பிடுகின்றன.

    இந்த கோவில் வளாகத்தில் காணப்படும் இரண்டு கல்வெட்டுக்கள், முக்கியத்துவம்வாய்ந்ததாக உள்ளன. கி.பி. 595-ம் ஆண்டுக்கும் கி.பி.602-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 'மகாகூட தூண் கல்வெட்டு, சமஸ்கிருதம் மற்றும் கன்னடஎழுத்து முறையில் உள்ளது.

    கி.பி.696-733-க்கு இடைப்பட்ட கல்வெட்டு, விஜயாதித்தன் என்ற மன்னனின் காதலியைப் பற்றி கன்னட மொழியில் காணப்படுகிறது. 'மகாகுடா' என்பதற்கு 'பெரிய குழு' என்று பொருள். இந்த வளாகத்தில் ஏராளமான சிவன் கோவில்கள் இருப்பதால் இந்த இடத்திற்கு இந்த பெயர் வழங்கப்பட்டது. மகாகுடா என்பதே தற்போது 'மகாகூடா' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவாலயங்களில்

    மகாகுடேசுவரர் கோவில், மல்லிகார்ச்சுனர் கோவில் ஆகியவை மிகப்பெரியவை. இவை திராவிட பாணியில் கட்டப்பட்ட ஆலயங்களாகும்.

    இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் மன்னன் ஒருவன் மகாகுடேசுவரர் கோவிலுக்கு மாணிக்கங்களையும், வெள்ளிக் குடையையும் வழங்கியிருப்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மகாகூட ஆலயங்களில் மல்லிகார்ச்சுனர் கோவில் முக்கியமானது.

     இந்த ஆலயத்தில் அருளும் சிவபெருமானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். லிங்கம் மகா குடேசுவரர் கோவிலில் வளைந்த கோபுரத்தின் மேல் சிவலிங்கம் உள்ளது. முன் பக்கத்தில் உள்ள நந்தி கோவிலைப் போலவே, இந்த பிரதான கோவிலைச்சுற்றிலும், ஏராளமான சிறிய கோவில்கள் காணப்படுகின்றன.

    இவ்வாலய சுவர்கள், சிவபெருமானின் அற்புதமான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கலாசாரம் மற்றும் பாரம்பரியம் நிறைந்த இங்குள்ள பல ஆலயங்கள், முதலாம் புலிகேசி மன்னன் சாளுக்கியரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

     இந்த கோவில் வளாகத்தில் அமைந்துள்ள இயற்கை மலை நீரூற்று, விஷ்ணு புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு 'விஷ்ணுவின் தாமரைக்குளம்' என்று பெயர். பாபவிநாச தீர்த்தம் என்ற பெயரும் இதற்கு உண்டு.

     இந்த தீர்த்தக் குளத்தைச் சுற்றிலும் 12-க்கும் அதிகமாக சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. இந்த தீர்த்தக்குளத்தின் மையத்தில் ஒரு சிறிய சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதிக்குள், ஒரு சிவலிங்கம் அமைந்திருக்கிறது. இந்த சிவலிங்கமானது பஞ்சமுக லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த லிங்கத்தின் நான்கு திசைகளிலும் நான்கு முகங்களும், மேல் நோக்கிய பகுதியில் ஒரு முகமும் அமைந்திருப்பதால், இதற்கு 'பஞ்சமுக லிங்கம்' என்று பெயர்.

    ×