என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி திரட்டும் திட்டம்"

    • அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
    • ராகுல் காந்தியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

    காங்கிரஸ் கட்சி துவங்கி 138 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதையொட்டி தேசத்திற்காக நன்கொடை அளியுங்கள் என்ற பெயரில் மக்களிடம் டிஜிட்டல் முறையில் நிதி சேகரிக்கும் திட்டம் சமீபத்தில் துவங்கப்பட்டது. மக்களிடம் நிதி சேகரிக்கும் காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுக்கூட்டத்திற்காக போடப்பட்ட இருக்கைகளின் பின்புறம், தேசத்திற்காக நன்கொடை அளியுங்கள் என்பதை கோரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.



    இதற்கான ஸ்டிக்கர்களுடன் ராகுல் காந்தியின் புகைப்படம் ஒருபுறமும், மறுபுறம் பணம் அனுப்புவதற்கான கியூ.ஆர். கோட்-ம் இடம்பெற்று இருக்கிறது. மேலும், "சிறப்பான இந்தியாவை உருவாக்க 138 ஆண்டுகால போராட்டத்தில், காங்கிரஸ்-க்கு நீங்கள் தேவை. இந்தியாவுக்கு நீங்கள் தேவை. ஸ்கேன் செய்து தானம் அளியுங்கள்," என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது. 

    • அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
    • தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் நிதி சேகரிக்கும் திட்டம்.

    காங்கிரஸ் கட்சி துவங்கி 138 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதையொட்டி தேசத்திற்காக நன்கொடை அளியுங்கள் என்ற பெயரில் மக்களிடம் டிஜிட்டல் முறையில் நிதி சேகரிக்கும் திட்டம் சமீபத்தில் துவங்கப்பட்டது. மக்களிடம் நிதி சேகரிக்கும் காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்த நிலையில், நிதி சேகரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் இரண்டு வாரங்களில் ரூ. 10 கோடி வசூலிக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. விரைவில் துவங்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் நிதி சேகரிக்கும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    "புத்தாண்டு, புதிய மைல்கற்கள் - இரண்டே வாரங்களில் ரூ. 10 கோடியை கடந்துவிட்டோம். 2024 துவங்கி இருப்பதை அடுத்து, இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டு சாதனைகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 138 ஆண்டுகால சேவையை கொண்டாடுகிறோம், நாங்கள் தேசத்திற்கு சேவையாற்ற துவங்கி 138 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது."

    "ஆன்லைன் நிதி சேகரிப்பில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறோம்- எங்களின் ஆன்லைன் நிதி சேகரிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவு பெற்றுவிட்டது. இதுவரை நாங்கள் ரூ. 10 கோடியை நன்கொடையாக பெற்று இருக்கிறது."

    "இந்த பயணத்தில் எங்களுடன் இணைந்த லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களின் பெருந்தன்மை அபாரமாக இருந்தது. இரண்டே வாரங்களில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 929 பரிமாற்ற கோரிக்கைகள். உங்களின் ஆதரவு தான் இந்த வெற்றிக்கு மூலக்காரணம்," என்று காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கன் தெரிவித்துள்ளார். 



    ×