என் மலர்
நீங்கள் தேடியது "பயிர் நிதி உதவி"
- பயிர்களுக்கான நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
- இத்தொகையின் மூலம் 3.60 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
2024-2025ல் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு ரூ.289.63 கோடி நிதி ஒதிக்கி உள்ளது.
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட 5.66 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.289.63 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. இத்தொகையின் மூலம் 3.60 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
- நிதி உதவி வழங்கும் திட்டத்தை ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ.வும், வேட்பாளருமான ஹரிஸ்ராவ் விளம்பரப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- பயிர் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு அளித்த அனுமதியை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது.
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற 30-ந்தேதி நடக்கிறது. இதற்கான இறுதிகட்ட பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன. இதற்கிடையே ராபி பயிர் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கும் மாநில அரசின் திட்டத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்து இருந்தது.
அதன்படி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் இன்று நிதி உதவி வரவு வைக்கப்படும் என்று முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்து இருந்தார். நிதி உதவி வழங்கும் திட்டத்தை ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ.வும், வேட்பாளருமான ஹரிஸ்ராவ் விளம்பரப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து பயிர் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு அளித்த அனுமதியை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது. விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்க தேர்தல் முடியும் வரை தற்காலிக தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது.






