என் மலர்
நீங்கள் தேடியது "இரண்டு மனைவிகள் இருக்கக் காரணம்"
- ஒன்று தெய்வத்தைத் தேடி வந்தது.
- தெய்வத்தை அடைய வழி காட்டும் பக்தி நிலைகள்.
மிகவும் நுணுக்கமான தகவல் இது. தெய்வங்களுக்கு உண்டான இரு மனைவியரில், ஒன்று தெய்வத்தைத் தேடி வந்தது; இன்னொன்று தெய்வமே தேடிப்போனது. தெய்வத்தை அடைய வழி காட்டும் பக்தி நிலைகளை அறிவிக்கக் கூடியவர்கள் இந்த இரு மனைவியர். இந்த இரண்டு நிலைகளை, 'மர்க்கட நியாயம் - மார்ஜால நியாயம்' என்பார்கள்.
அதாவது, மர்க்கடம்-குரங்கு, மார்ஜாலம்-பூனை, குரங்கு தன் குட்டியைப் பிடித்துத் தூக்காது. குட்டி தான் மல்லாக்கப்படுத்த நிலையில், தாயின் அடி வயிற்றைக் கவ்விப் பிடித்திருக்கும். அந்த நிலையிலேயே தாய் மரத்திற்கு மரம் தாவும். அப்போது தாயைக் கவ்விப் பிடித்திருக்கும் குட்டிக்குரங்கு கீழே விழுந்தால், அதை மறுபடியும் தாய் தன்னுடன் சேர்த்துக் கொள்ளாது. அது போல, தெய்வத்தை நாம் தேடிப் பிடித்து (தவம், யாகம், யோகம், கடும் விரதங்கள் மூலம்) அடைவது என்பது கடினமான காரியம்; தவறுகள் நேர வாய்ப்பு உண்டு. உதாரணம்: விசுவாமித்திரர்.
ஆனால் மார்ஜாலம் எனும் பூனை பக்தியிலோ, பிரச்சினைகள் கிடையாது. எந்தவொரு பூனைக்குட்டியும் தாயைப் பிடித்துக் கொள்ளாது. இருந்த இடத்தில் இருந்தே `மியாவ்' என்று மென்மையாகக் குரல் கொடுக்கும். உடனே தாய் பூனை ஓடிவந்து, தன் குட்டியை பத்திரமாகத் தூக்கிச் செல்லும். குட்டிக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது. பொறுப்பு தெய்வத்தினுடையது. இது பூனை பக்தி. உதாரணம்: கண்ணப்ப நாயனார். இந்த இருவிதமான பக்தி நிலைகளைத்தான், இருவிதமான சக்திகளாக, மனைவிகளாகச் சொன்னார்கள்.






