என் மலர்
நீங்கள் தேடியது "ஆத்யவீர்"
- மாலங்கி நதியில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
- மாலங்கி நதியில் நீர்வரத்து இல்லை.
விஜயநகர தளபதி ஸ்ரீரங்கராயனிடம் இருந்து ஸ்ரீரங்கப்பட்டணாவை கடந்த 1601-ம் ஆண்டு அன்றைய மைசூரு மகாராஜா ராஜ உடையார் கைப்பற்றினார். அப்போது ஸ்ரீரங்கராயனின் மனைவி அலமேலம்மாவின் அழகில் மயங்கிய மகாராஜ ராஜ உடையார், அவரை பிடித்து வர தனது படைகளை அனுப்பினார். அப்போது அவர்களிடம் இருந்து அலமேலம்மா தப்பி ஓடினார். அவர் தப்பித்து சென்றபோது மாலங்கி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதற்கு மேல் தப்பி ஓட முடியாததால் அலமேலம்மா மகாராஜா ராஜ உடையாருக்கு சாபமிட்டார். `தலக்காடு மணல் மூடி போகட்டும், மாலங்கி நதி மடுவாகட்டும், உடையார் பரம்பரை வாரிசற்று போகட்டும்' என்று கூறி சாபமிட்டார். மேலும் மாலங்கி நதியில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

அவர் விட்ட சாபம்போல் தலக்காடு இன்று வரை மணல் மூடித்தான் இருக்கிறது. மாலங்கி நதியில் நீர்வரத்து இல்லை. மேலும் உடையார் பரம்பரையும் வாரிசு இல்லாமல் இருந்தனர். அவர்கள் தத்துப்பிள்ளைகளையே வாரிசுகளாக கொண்டிருந்தனர். ஆனால் கடைசியாக முடிசூடிய யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாருக்கு வாரிசு பிறந்தது. அவரும், ராஜஸ்தான் மாநில ராஜ குடும்பத்தைச் சேர்ந்த திரிஷிகா குமாரிக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அலமேலம்மா சாபத்திற்கு உடையார் குடும்பத்தில் பிறந்த முதல் வாரிசு இந்த குழந்தை தான். இந்த குழந்தைக்கு ஆத்யவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் என்று பெயரிட்டுள்ளனர். இதன்மூலம் அலமேலம்மாவின் சாபம் நீங்கியது.






