என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவராத்திரி அலங்காரம்"

    • மகிஷாசுரனை வதம் செய்ய புறப்பட்ட ராஜராஜேஸ்வரி அலங்காரம்.
    • சர்ப்ப ராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் சண்டிகா தேவி அலங்காரம்.

    முதல் நாள்:- மது-கைடபர் என்ற அரக்கர்களின் அழிவிற்குக் காரணமாக விளங்கிய குமரி வடிவ அலங்காரம்.

    இரண்டாவது நாள்:-  மகிஷாசுரனை வதம் செய்யப் புறப்பட்ட ராஜராஜேஸ்வரி அலங்காரம்.

    மூன்றாம் நாள்:- மகிஷாசுர வதம் முடித்து, சூலத்தைக் கையிலேந்தி மகிஷத்தின் தலை மீது வீற்றிருக்கும் கல்யாணி வடிவம்.

    நான்காம் நாள்:- சிம்மாசனத்தில் அமர்ந்து, இன்னல்களில் இருந்து விடுபட்ட தேவர்களும் முனிவர்களும் செய்யும் தோத்திரங்களை ஏற்று அவர்களுக்கு அருள்பாலிக்கும் ஜெய துர்க்கை அலங்காரம்.

    ஐந்தாம் நாள்:- சுகாசனத்தில் வீற்றிருந்து, கம்பன் என்ற அசுரனால் அனுப்பப்பட்ட தூதுவனாகிய சுக்ரீவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பாவனையில் துர்க்கை அலங்காரம்.

    ஆறாம் நாள்:- சர்ப்ப ராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் சண்டிகா தேவி அலங்காரம்.

    ஏழாம் நாள்:- சண்ட, முண்டர்கள் என்ற அசுரர்களை வதம் செய்த பின், பொற்பீடத்தில் அமர்ந்து வீணை வாசிக்கும் சாம்பவி கோலம்.

    எட்டாம் நாள்:-  ரக்தபீஜன் வதைக்குப் பிறகு, கருணை நிறைந்தவளாய், அஷ்ட சித்திகளும் புடைசூழ வீற்றிருக்கும் கோலம்.

    ஒன்பதாம் நாள்:-  அரக்கர்களை அழித்து முடித்து, கரங்களில் வில், பாசம், அங்குசம், சூலம் ஏந்தியவளாக, சிவசக்தி வடிவமாகக் காட்சி தரும் காமேஸ்வரி கோலம்.

    ×