என் மலர்
நீங்கள் தேடியது "வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்"
- வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.
- வருகிற 26 -ந் தேதி ஏரியூர் ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் ராம நாகம்மாள் மண்டபத்தில் நடக்கிறது.
தருமபுரி,
தருமபுரி தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஒன்றிய நகர பேரூர் வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். நாளை (23-ந் தேதி) காலை 10 மணிக்கு தருமபுரி நகர தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடக்கிறது.
மதியம் 12 மணிக்கு அதியமான் கோட்டை நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க. அலுவல கத்திலும், பிற்பகல் 2 மணிக்கு நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய தி.மு.க. அலுவலகத்திலும், முகவர்கள் ஆய்வு கூட்டம் நடக்கிறது.
வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.
இண்டூரில் மதியம் 12 மணிக்கும் தருமபுரி மேற்கு ஒன்றிய தி.மு.க. முகவர்கள் கூட்டம் மாவட்ட தி.மு.க. அலுவலகத்திலும், பிற்பகல் 2 மணிக்கு பாலக்கோடு கிழக்கு ஒன்றிய தி.மு.க. முகவர்கள் ஆய்வுக் கூட்டம் சோமன அள்ளியிலும் நடக்கிறது.
வருகிற 26 -ந் தேதி ஏரியூர் ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் ராம நாகம்மாள் மண்டபத்திலும், மதியம் 12 மணிக்கு பென்னாகரம் தெற்கு பென்னாகரம் பேரூர் தி.மு.க. முகவர்கள் ஆய்வு கூட்டம் சமுதாய கூட்டத்திலும் நடக்கிறது. அன்றைய தினம் பென்னாகரம் வடக்கு பாப்பாரப்பட்டி பேரூர் தி.மு.க முகவர்கள் ஆய்வு கூட்டம் செங்குந்தர் மண்டபத்திலும் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- தண்ணீர் வசதி செய்து கொடுப்பது உள்பட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
காங்கயம் :
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள படியூரை அடுத்த தொட்டியபாளையத்தில் வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்பட 7 மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடி வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசுகிறார்.
அதற்காக தொட்டியபாளையத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு மேடை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அந்த இடத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கூட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை வரவேற்பது, கூட்டத்துக்கான மேடை அமைப்பது, இருக்கை வசதி செய்வது, பந்தல் அமைப்பது, வாகன நிறுத்தம் அமைப்பது, கூட்டத்துக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி் செய்து கொடுப்பது உள்பட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார், செல்வராஜ் எம்.எல்.ஏ. திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன், காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவானந்தன் மற்றும் தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள், காங்கயம், வெள்ளகோவில் நகர, ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் போது கூட்டம் நடைபெறுவதற்கான இடத்தை தேர்வு செய்து கொடுத்த காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவானந்தனுக்கு அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர்.






