என் மலர்
நீங்கள் தேடியது "சதுரகரி கோவில்"
- மலைப்பகுதியில் வெயில் இல்லாத நிலையில், காலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
- சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவியில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசை விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்தாண்டு ஆடி அமாவாசை விழா வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று (22-ந் தேதி) முதல் 25-ந் தேதி வரை கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நேற்று நள்ளிரவு முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று காலை 5.45 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப் பட்டு, தீவிர சோதனைக்குப் பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மலைப்பகுதியில் வெயில் இல்லாத நிலையில், காலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் பக்தர்கள் ஆர்வமுடன் மலையேறினர்.
இன்று மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. நாளை சிவராத்திரி, நாளை மறுநாள் 24-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் 25-ந் தேதி மதியம் 1.15 வரை அமாவாசை திதி இருப்பதால் 24-ந் தேதி ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.
இந்நிலையில், சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோவிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மதுரை சரக டி.ஐ.ஜி. அபினோ குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பக்தர்கள் செல்வதற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதையையும், வனத்துறை கேட்டில் இருந்து பக்தர்கள் செல்லக்கூடிய பாதையையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, விருதுநகர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கண்ணன், ஏ.டி.எஸ்.பி. அசோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் டி. எஸ்.பி. ராஜா, வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். பின்னர் மாலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா, ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
- சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- 60 சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்து அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப் பட்டு வருகிறது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் சாப்டூர் சதுரகிரி சுந்தரமகா லிங்கம் சுவாமி தரிசனம் செய்ய தாணிப்பாறை அடி வாரத்தில் இருந்து பக்தர்கள் மலையேறி வருகின்றனர். பேரையூர் அடுத்த சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள் ளது சதுரகிரி சுந்தரமகாலிங் கம் திருக்கோவில்.
18 சித்தர்கள் வந்து தரிச னம் செய்த இம்மலையில் தற்போது வரையில் இங்கே சித்தர்கள் உலாவி வருகின் றனர். ஒவ்வொரு தமிழ் மாதமும் பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை, பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுவர்.
இந்நிலையில் ஆடி அமா வாசை தினமான இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தாணிப்பறை அடிவாரம் வழியாக அரசின் வழிகாட்டு நெறிமுறை மற்றும் கடுமையான சோத னைகளுக்கு உட்படுத்தப் பட்டு மலையேற அனுமதிக் கப்பட்டு வருகின்றனர். வழக்கமாக ஆடி அமாவாசை தினத்தன்று அதிகம் கூட்டம் இருக்கும் என்பதால் 2,000 போலீசார், 50-க்கும் மேற் பட்ட நக்சல் தடுப்பு பிரிவு பிரிவினர் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.
60 சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்து அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப் பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இருமுறை மலையில் தீ விபத்து ஏற்பட் டதால் பக்தர்கள் கடுமை யான சோதனைக்கு பின் னரே மலைக்கு அனும–திக் கப்பட்டு வருகிறனர். குறிப் பாக எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை மேலே கொண்டு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
மேலும் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீர் நிலைகளில் குளிக்கவும் அனுமதி கிடையாது. முன்ன–தாக நேற்று பிற்பகலை அமாவாசை காலம் தொடங் கிய காரணத்தினா–லும் நேற்று விடுமுறை தினத்தா லும் பக்தர்கள் நேற்று முதலே மலையேறி சுந்தர மாலிங்கம் சுவாமியை தரி சனம் செய்து வருவதால் இன்று எதிர்பார்க்கப்பட்ட கூட்டத்தை விட சற்று குறை வாகவே காணப்பட்டது.
இந்த ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை தினம் வந்ததால் கூட்டம் பெருவா ரியாக பிரிந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. பிற்பகல் 12 வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனும திக்கப்படுவர். ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி நாட் களில் நாளை கடைசி தினம் என்பதால் நாளையும் பக்தர் கள் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.






