என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச சர்பிங் போட்டி"

    • 20 ஆசிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் ஷார்ட்போர்டு பிரிவுகளில் போட்டியிடுவார்கள்.
    • இந்திய அணியில் உள்ள 12 வீரர்களில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

    ஏசியன் சர்ஃபிங் அசோசியேஷன் சார்பில் ஆகஸ்ட் மாதம் 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் 4-வது [ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்-2025] போட்டிக்கான முதற்கட்ட பயிற்சி இன்று காலை மாமல்லபுரம் கடற்கரை கோவில் வடபகுதியில் தொடங்கியது.

    இதில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், சீனா, இந்தோனேஷியா, ஜப்பான், கொரியா, குவைத், லெபனான், மலேசியா, மாலத்தீவுகள், மியான்மர், பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா, சிங்கப்பூர், இலங்கை, சீன தைபே, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உஸ்பெகிஸ்தான் ஆகிய 20 நாடுகளை சேர்ந்த சர்பிங் வீரர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலையில் இருந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.



    இந்த ஆண்டு நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 20 ஆசிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் ஷார்ட்போர்டு பிரிவுகளில் போட்டியிடுவார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் தாமிரம் பதக்கங்கள் வழங்கப்படும். மேலும் இந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரர்கள் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதி இடங்களுக்கும் போட்டியிடுவார்கள். இந்திய அணியில் உள்ள 12 வீரர்களில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய வீரர்கள் 70 பேரை தேர்வு செய்யும் "நேஷனல் லெவல்" போட்டி இன்று மாமல்லபுரத்தில் துவங்கியது.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட சர்பிங் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் வரும் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை சர்வதேச கடல் அலைச்சறுக்கு (சர்பிங்) போட்டி கடற்கரை கோயில் வடபகுதி கடலோரத்தில் நடைபெற உள்ளது.

    இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் இந்திய வீரர்களும் பங்கேற்கிறார்கள்.

    சர்வதேச போட்டியில் பங்கேற்க தகுதியான இந்திய வீரர்கள் 70 பேரை தேர்வு செய்யும் "நேஷனல் லெவல்" போட்டி இன்று மாமல்லபுரத்தில் துவங்கியது.

    இதில், கோவா, பாண்டிச்சேரி, மங்களூர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒரிசா, சென்னை, கோவளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட சர்பிங் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    குறிப்பிட்ட நிமிடத்தில் வரும், அலை கணக்கை வைத்து அதில் விழாமல் அதிக நேரம் சர்ப் செய்வதை கணக்கிட்டு, மாநிலம் வாரியாக சர்வதேச வீரர்களை, சர்பிங் பெடரேசன் ஆப் இந்தியா, தமிழ்நாடு சர்ப் அசோசியேசன் அமைப்பினர் இன்று காலையில் இருந்து தேர்வு செய்து வருகின்றனர்.

    ×