என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International Surfing Competition"

    • 20 ஆசிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் ஷார்ட்போர்டு பிரிவுகளில் போட்டியிடுவார்கள்.
    • இந்திய அணியில் உள்ள 12 வீரர்களில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

    ஏசியன் சர்ஃபிங் அசோசியேஷன் சார்பில் ஆகஸ்ட் மாதம் 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் 4-வது [ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்-2025] போட்டிக்கான முதற்கட்ட பயிற்சி இன்று காலை மாமல்லபுரம் கடற்கரை கோவில் வடபகுதியில் தொடங்கியது.

    இதில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், சீனா, இந்தோனேஷியா, ஜப்பான், கொரியா, குவைத், லெபனான், மலேசியா, மாலத்தீவுகள், மியான்மர், பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா, சிங்கப்பூர், இலங்கை, சீன தைபே, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உஸ்பெகிஸ்தான் ஆகிய 20 நாடுகளை சேர்ந்த சர்பிங் வீரர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலையில் இருந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.



    இந்த ஆண்டு நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 20 ஆசிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் ஷார்ட்போர்டு பிரிவுகளில் போட்டியிடுவார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் தாமிரம் பதக்கங்கள் வழங்கப்படும். மேலும் இந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரர்கள் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதி இடங்களுக்கும் போட்டியிடுவார்கள். இந்திய அணியில் உள்ள 12 வீரர்களில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச அலைசறுக்கு போட்டி இந்தியாவில் அரங்கேறுவது இதுவே முதல்முறையாகும்.
    • இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு 3 தகுதி சுற்று போட்டிகள் நடத்தப்படுகிறது.

    தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு சர்பிங் (அலைசறுக்கு) சங்கம் சார்பில் இந்திய சர்பிங் சம்மேளனம் அனுமதியுடன் சர்வதேச அலைசறுக்கு ஓபன் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள கடலில் ஆகஸ்டு 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது. இது உலக சர்பிங் லீக் போட்டி தொடருக்கு உட்பட்டதாகும்.

    சர்வதேச அலைசறுக்கு போட்டி இந்தியாவில் அரங்கேறுவது இதுவே முதல்முறையாகும். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா உள்பட 10 வெளிநாடுகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்தியா சார்பில் 10 பேர் களம் காணுகிறார்கள். போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.37 லட்சமாகும். இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு 3 தகுதி சுற்று போட்டிகள் நடத்தப்படுகிறது.

    ×