என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க. மகளிர் அணி"

    • மாவட்ட செயலாளர் மகேஷ் அறிக்கை
    • தலைமை தபால் நிலையம் அருகில் வைத்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும் நாகர்கோவில் மாநக ராட்சி மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் மீதான கொடூர பாலியல் தாக்குதலும், உச்சகட்டமாக பெண்கள் அங்கு நிர்வா ணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை இதுவரை கண்டு கொள்ளாமல் இருக்கும் மத்திய மற்றும் அந்த மாநில பா.ஜ.க. அரசை கண்டித்து நாளை (24-ந்தேதி) காலை 10 மணிக்கு நாகர்கோவில், தலைமை தபால் நிலையம் அருகில் வைத்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    ஆர்ப்பாட்டம் மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலை மையிலும், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெனஸ் மைக்கேல், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் லதா கலைவாணன், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் அம்மு ஆன்றோ, மாநகர மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மேரி ஜெனட் விஜிலா ஆகியோர் முன்னலையிலும் நடைபெற உள்ளது.

    ஆகவே இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, மாநகர மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், சார்பு அணிகளின் மகளிர் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் (மகளிர்), வட்ட, கிளை மகளிர் மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வா கிகள், மகளிர் தொண்டர்கள் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள் மற்றும் பொதுமக்க ளும் கலந்து கொள்ள வேண் டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கண்களை கருப்பு துணியால் மூடி பங்கேற்றனர்
    • நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்தது

    நாகர்கோவில் :

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் இரு சமுதாயத்தினர் இடையே யான கலவரத்தை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது என்பதற்கு கண்டனம் தெரிவித்தோம், அங்கு பெண்கள் நிர்வாணப் படுத்தி ஊர்வலமாக அழைத்துச்சென்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் இன்று நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு மாநில மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஹெலன் டேவிட்சன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட் டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், நாகர் கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-சிறுபான்மை யினர் மக்கள் மீது அநீதியை திணிப்பது தான் மோடியின் ஆட்சியாக இருந்து வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து வருகிறது.

    குறிப்பாக பெண் கல்வி, மகளிர் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பா.ஜ.க. ஆளும் மணிப்பூரில் பெண்களுக்கு பல்வேறு கொடுமைகள் நடந்து வருகிறது. மணிப்பூரில் நடந்து வரும் இரு சமூகத்தினர் இடையேயான கலவரத்தை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது. அங்கு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நிர்வாணப் படுத்தப்பட்டு வருகிறார்கள். நாட்டில் சர்வாதிகார ஆட்சியை பாரதிய ஜனதா செய்து வருகிறது. அ.தி.மு.க. தொண்டன் கூட பா.ஜ.க.வை வெறுக்கி றார்கள் என்பதுதான் உண்மை. அமைதி பூங்கா வாக இருக்கும் தமிழகத்தை கவர்னரை வைத்து கலவர பூமியாக மாற்ற பா.ஜ.க. நினைக்கிறது. மணிப்பூர் விவகாரத்திற்கு பா.ஜ.க. வுக்கு தக்க பாடத்தை வருகிற தேர்தலில் நாட்டு மக்கள் கொடுப்பார்கள்.

    பா.ஜ.க. ஆட்சி நடத்திய பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநில நிர்வாகிகள் தில்லை செல்வம், பசலியான், மாநகர செயலாளர் ஆனந்த், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், ஒன்றிய செயலாளர்கள் பாபு, மதியழகன், பிராங்கிளின், செல்வம் லிவிங்ஸ்டன், மகளிர் அணி நிர்வாகிகள் ஜனஸ் மைக்கேல், மேரி ஜெனட் விஜிலா, ஜெசிந்தா, கரோலின், மாநகர மகளிர் அமைப்பாளர் அம்மு ஆன்றோ, அழகிய பாண்டிபுரம் பேரூராட்சி தலைவர் ஜெயஷீலா கேட்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் சிலர் தங்களது கண்களை கருப்பு துணியால் மூடி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங் கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது. 

    ×