என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    • மாவட்ட செயலாளர் மகேஷ் அறிக்கை
    • தலைமை தபால் நிலையம் அருகில் வைத்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும் நாகர்கோவில் மாநக ராட்சி மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் மீதான கொடூர பாலியல் தாக்குதலும், உச்சகட்டமாக பெண்கள் அங்கு நிர்வா ணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை இதுவரை கண்டு கொள்ளாமல் இருக்கும் மத்திய மற்றும் அந்த மாநில பா.ஜ.க. அரசை கண்டித்து நாளை (24-ந்தேதி) காலை 10 மணிக்கு நாகர்கோவில், தலைமை தபால் நிலையம் அருகில் வைத்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    ஆர்ப்பாட்டம் மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலை மையிலும், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெனஸ் மைக்கேல், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் லதா கலைவாணன், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் அம்மு ஆன்றோ, மாநகர மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மேரி ஜெனட் விஜிலா ஆகியோர் முன்னலையிலும் நடைபெற உள்ளது.

    ஆகவே இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, மாநகர மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், சார்பு அணிகளின் மகளிர் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் (மகளிர்), வட்ட, கிளை மகளிர் மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வா கிகள், மகளிர் தொண்டர்கள் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள் மற்றும் பொதுமக்க ளும் கலந்து கொள்ள வேண் டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×