என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்
- கண்களை கருப்பு துணியால் மூடி பங்கேற்றனர்
- நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்தது
நாகர்கோவில் :
மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் இரு சமுதாயத்தினர் இடையே யான கலவரத்தை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது என்பதற்கு கண்டனம் தெரிவித்தோம், அங்கு பெண்கள் நிர்வாணப் படுத்தி ஊர்வலமாக அழைத்துச்சென்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் இன்று நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு மாநில மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஹெலன் டேவிட்சன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட் டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், நாகர் கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசிய தாவது:-சிறுபான்மை யினர் மக்கள் மீது அநீதியை திணிப்பது தான் மோடியின் ஆட்சியாக இருந்து வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து வருகிறது.
குறிப்பாக பெண் கல்வி, மகளிர் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பா.ஜ.க. ஆளும் மணிப்பூரில் பெண்களுக்கு பல்வேறு கொடுமைகள் நடந்து வருகிறது. மணிப்பூரில் நடந்து வரும் இரு சமூகத்தினர் இடையேயான கலவரத்தை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது. அங்கு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நிர்வாணப் படுத்தப்பட்டு வருகிறார்கள். நாட்டில் சர்வாதிகார ஆட்சியை பாரதிய ஜனதா செய்து வருகிறது. அ.தி.மு.க. தொண்டன் கூட பா.ஜ.க.வை வெறுக்கி றார்கள் என்பதுதான் உண்மை. அமைதி பூங்கா வாக இருக்கும் தமிழகத்தை கவர்னரை வைத்து கலவர பூமியாக மாற்ற பா.ஜ.க. நினைக்கிறது. மணிப்பூர் விவகாரத்திற்கு பா.ஜ.க. வுக்கு தக்க பாடத்தை வருகிற தேர்தலில் நாட்டு மக்கள் கொடுப்பார்கள்.
பா.ஜ.க. ஆட்சி நடத்திய பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநில நிர்வாகிகள் தில்லை செல்வம், பசலியான், மாநகர செயலாளர் ஆனந்த், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், ஒன்றிய செயலாளர்கள் பாபு, மதியழகன், பிராங்கிளின், செல்வம் லிவிங்ஸ்டன், மகளிர் அணி நிர்வாகிகள் ஜனஸ் மைக்கேல், மேரி ஜெனட் விஜிலா, ஜெசிந்தா, கரோலின், மாநகர மகளிர் அமைப்பாளர் அம்மு ஆன்றோ, அழகிய பாண்டிபுரம் பேரூராட்சி தலைவர் ஜெயஷீலா கேட்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் சிலர் தங்களது கண்களை கருப்பு துணியால் மூடி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங் கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது.






