என் மலர்
நீங்கள் தேடியது "அந்தோனி அல்பானீஸ்"
- சிட்னியின் போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிறு அன்று துப்பாக்கிச்சூடு நடந்தது.
- இதில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கான்பெரா:
ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபலமானது.
அந்தக் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யூதர்கள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் பலியாகினர்.
முதல் கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த சாஜித் அக்ரம், நவீத் அக்ரம் (24) என்பதும், தந்தை, மகனான அவர்கள் இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியானது.
இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிய அல் அகமதுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர் சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வரும் அல் அகமது (40) என தெரியவந்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல் அகமதுவை ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதுகுறித்து, அல்பானீஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், அகமது நீங்கள் ஒரு ஆஸ்திரேலிய ஹீரோ. சிட்னி கடற்கரையில் மக்களைக் காப்பாற்ற உயிரை பணயம் வைத்து பயங்கரவாதியிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கி சரணடைய வைத்த உங்களுக்கு ஒவ்வொரு ஆஸ்திரேலிய மக்களின் சார்பாகவும் நன்றி கூறுகிறேன் என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், துணிச்சலாக செயல்பட்ட பல உயிர்களைக் காப்பாற்றிய கதாநாயகன் அல் அகமதுவின் சிகிச்சைக்காக பல்வேறு தன்னார்வ அமைப்புகள் வசூலித்த ஒரு மில்லியன் டாலர் நன்கொடையை அவரிடம் வழங்கினர்.
- ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஒரு பேப்பரை எடுத்து 2-1 என்று ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருப்பதாக காட்டினார்.
- அதற்கு பதிலடியாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற புகைப்படத்தை காட்டினார்.
லண்டன்:
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதுவரை 3 போட்டிகள் முடிந்த நிலையில், சண்டை மற்றும் சர்ச்சைகளும் வந்தம் வண்ணம் இருந்தது. பேர்ஸ்டோவ் ஸ்டம்பிங் சர்ச்சை. 100-வது டெஸ்டில் ஆடிய ஸ்டீவ் ஸ்மித்தை பேர்ஸ்டோவ் கிண்டல் செய்த விதம், ஸ்டீவ் ஸ்மித்தை இங்கிலாந்து ரசிகர்கள் வம்புக்கு இழுத்தது, லார்ட்ஸ் மைதானத்தில் எம்சிசி உறுப்பினர்கள் கவாஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என்று அடுத்தடுத்து புதிய சர்ச்சைகள் உருவாகியது.
?Rishi Sunak has a giggle with Australian PM Anthony Albanese over the Ashes.
— Abdullah Neaz (@Abdullah__Neaz) July 12, 2023
"I'm sorry, I didn't bring my sandpaper with me!"#INDvsWI #Ashes pic.twitter.com/ktNLgbVDsZ
இந்த நிலையில் பேர்ஸ்டோவ் ஸ்டம்பிங் சர்ச்சை இரு நாட்டு பிரதமர்கள் வரை சென்றது. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நேரில் சந்தித்து கொண்டனர். அப்போது இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. இறுதியாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஒரு பேப்பரை எடுத்து 2-1 என்று ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருப்பதாக காட்டினார்.
அதற்கு பதிலடியாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற புகைப்படத்தை காட்டினார். இதற்கு பதிலடியாக பேர்ஸ்டோவை ஸ்டம்பிங் செய்த புகைப்படத்தை ஆஸ்திரேலிய பிரதமர் காட்ட, உடனடியாக சுதாரித்த ரிஷி சுனக், சாண்ட்பேப்பரை மறந்துவிட்டதாக பதிலடி கொடுத்தார். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சாண்ட்பேப்பரை வைத்து பந்தை சேதப்படுத்தியதை அவர் நினைவு கூறினார்.
இரு நாட்டு பிரதமர்கள் சந்தித்த போது ஆஷஸ் டெஸ்ட் தொடரை வைத்து கலாய்த்து கொண்டது ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
- ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஜி20 உறுப்பு நாடுகள் இணைந்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றின.
சிட்னி:
ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றி ஜி20 உச்சிமாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த உச்சி மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் இணைந்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றின.
இந்த ஜி20 உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது,குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிகரமாக ஜி20 கூட்டத்தை நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடிப்பது குறித்து இருதரப்பினரும் ஆலோசனை நடத்தினோம் என்று பதிவிட்டுள்ளார்.






