என் மலர்
நீங்கள் தேடியது "சருகு மாரியம்மன்"
- பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- இதையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் சருகு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 6-ந் தேதி பூச்சாட்டு விழா தொடங்கியது. 11-ந் தேதி இரவு அம்மனை அழைத்து தீர்த்த குடம் எடுத்து வந்தனர்.
பின்னர் நேற்று காலை திருவிழாவானது தொடங்கியது. இதில் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்பு பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் வந்தனர்.
தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், வரும் 19-ந் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை ந.சுப்பையன் திருப்பணி விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.






