என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்கட் அவுட்"

    • பேட்ஸ்மேன் தனக்கு இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி கூடுதலாக ஒரு அடி முன்னே செல்கிறார்.
    • மன்கட் முறையில் செய்த ரன் அவுட் முறையீட்டை திரும்பப் பெற்றது திக்வேஷ் ரதிக்கு அவமானம்.

    2025 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியின் முக்கியமான கட்டத்தில் ஜிதேஷ் சர்மாவை லக்னோ அணியின் சுழற்பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி, மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். ஆனால் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், இந்த அவுட் முறையீட்டை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதனை பலரும் பாராட்டி வந்தனர்.

    இந்நிலையில் மன்கட் செய்த பந்துவீச்சாளரை ரிஷப் பண்ட் அவமானப்படுத்தி விட்டதாகவும், இப்படி செய்தால் அந்தப் பந்துவீச்சாளர் எப்படி மீண்டும் மன்கட் முறையில் விக்கெட் எடுக்க முயற்சி செய்வார்? எனவும் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மன்கட் முறையில் செய்த ரன் அவுட் முறையீட்டை திரும்பப் பெற்றது திக்வேஷ் ரதிக்கு அவமானம். அந்தப் பந்துவீச்சாளர் கூனிக்குறுகிப் போயிருப்பார். இனி இதுபோல ரன் அவுட் செய்ய முயற்சிக்க மாட்டார். ஏன் அதை அவர் மீண்டும் செய்யக்கூடாது?

    இது விதி சார்ந்த ஒரு விஷயம். பேட்ஸ்மேன் தனக்கு இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி கூடுதலாக ஒரு அடி முன்னே செல்கிறார். அதன் மூலம் இரண்டு ரன்களை வேகமாக ஓட முயற்சி செய்கிறார். இங்கே அவர் அவுட் ஆனாரா? இல்லையா? என்பது விஷயம் இல்லை. கேப்டன் அந்த முறையீட்டை திரும்பப் பெற்றாரா? இல்லையா? என்பதுதான் விஷயம். இங்கே நாம் கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி மட்டும் சில வினாடிகள் பேசுவோம்.

    விதிப்படி இந்த முடிவு மூன்றாவது நடுவருக்குச் சென்றது. நடுவர் 'நாட் அவுட்' என்று சொன்னார். அப்படி என்றால் இது 'நாட் அவுட்' தான். இதில் அந்த முறையீட்டை திரும்பப் பெறுவதற்கான அவசியமே இல்லை. ஒருவேளை ஜிதேஷ் சர்மா 'அவுட்' என தீர்ப்பு வந்திருந்தால், பந்துவீச்சாளர் தான் பந்து வீசி முடிக்கும் முன்பாகவே அவர் தனது கால்களை எடுத்து வெளியே வைத்திருந்தால் இது 'அவுட்' என தீர்ப்பாக இருந்திருக்கும்.

    அப்போதும் பந்துவீச்சாளர் பக்கமே நியாயம் இருந்திருக்கும். ஆனால் இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் அந்த அணியின் ரசிகர்கள் பார்வையில் மோசமான விஷயமாக இருந்திருக்கும். அவர்கள் ரதி மற்றும் ரிஷப் பண்ட்டை விரும்பி இருக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அஸ்வின் கூறினார்.

    • அவர் 43 ரன் எடுத்திருந்த போது மன்கட் முறையில் அவுட் செய்யப்பட்டார்.
    • கிளேர்மான்ட் அணி 214 ரன்களில் சுருண்டது.

    ஆஸ்திரேலியாவில் நடந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டியின் போது, நான்-ஸ்ட்ரைக்கர் முடிவில் ஒரு பேட்டர் ரன்-அவுட் ஆனார். ஆட்டமிழந்த ஆத்திரத்தில் அவர் தனது பேட் மற்றும் கையுறைகளை தூக்கி எறிந்து கோபத்துடன் களத்தில் இருந்து வெளியேறினார்.

    ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு உள்நாட்டுப் போட்டியில் கிளேர்மொன்ட் மற்றும் நியூ நோர்ஃபோக் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் பந்து வீச்சாளர் கிரீஸை விட்டு வெளியேறிய நான்-ஸ்ட்ரைக்கர் அவுட் செய்தார்.

    இதற்கான முடிவு மூன்றாவது நடுவருக்கு அனுப்பப்பட்டது. முடிவில் அவர் அவுட் என அறிவிக்கப்பட்டது. இந்த முடிவால் கோபமடைந்த அவர் பெவிலியனுக்குத் திரும்பும் போது தனது பேட் மற்றும் கையுறைகளை தூக்கி எறிந்தார். இது களத்தில் இதுவரை கண்டிராத சில காட்சிகளுக்கு வழிவகுத்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூ நார்போக் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கிளேர்மான்ட் அணி 214 ரன்களில் சுருண்டது. அணியில் அதிகபட்சமாக ஜாரோட் கேய் (43), ரிக் மார்ட்டின் (70) ரன்களை எடுத்தனர். நான்-ஸ்ட்ரைக்கர் முடிவில் ரன்-அவுட் ஆன கேய் அரை சதத்தையாவது தவறவிட்டார்.

    • ஹர்சல் படேலின் அந்த தைரியத்தை கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
    • இது போல மேலும் பல பவுலர்கள் செய்ய வேண்டுமென விரும்புகிறேன்.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் சீசனின் 15-வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் விளையாடின. இந்த போட்டியின் கடைசி பந்தில் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த ரவி பிஷ்னோயை 'மன்கட்' முறையில் ஹர்ஷல் படேல் அவுட் செய்ய முயற்சி செய்திருப்பார். அவரது அந்த தைரியம் தனக்கு மகிழ்ச்சி கொடுப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    ஆட்டத்தின் இக்கட்டான கட்டத்தில் ஹர்ஷல் படேல் இதை செய்திருப்பார்.

    இது குறித்து அஸ்வின் கூறியதாவது:-

    வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவை. ஒரு பந்து தான் எஞ்சி உள்ளது. நான்-ஸ்ட்ரைக்கர் எப்படியும் ரன் எடுக்கவே முயற்சிப்பார். அந்த சூழலில் எப்போதுமே நான் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்யவே முயற்சிப்பேன். அதன் விளைவுகள் என்ன என்பது குறித்தெல்லாம் யோசிக்க மாட்டேன்.

    நான் அந்தப் போட்டியை பார்த்த போது. அவர் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்ய வேண்டும் என என் மனைவியிடம் சொன்னேன். பவுலரும் அதை செய்தார். அவரது அந்த தைரியத்தை கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இது போல மேலும் பல பவுலர்கள் செய்ய வேண்டுமென விரும்புகிறேன். இது விதிகளுக்கு உட்பட்ட ஒன்றுதான்.

    இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2019 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்காக அஸ்வின் விளையாடிய போது இதே முறையில் ராஜஸ்தான் வீரர் பட்லரை அவுட் செய்திருந்தார். அது அப்போது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    ×