என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலா வரும் யானைகள்"

    • வனவிலங்குகள் தண்ணீர், உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாகி விட்டது.
    • வனப்பகுதியில் உலா வந்த யானைகளால் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    கோத்தகிரி,

    காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது அனைத்துப்பகுதிகளிலும் வறட்சி காணப்படுவதால் வனப்பகுதிகளில் உள்ள விலங்குகள் தண்ணீர், உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு அடிக்கடி வருவது வாடிக்கையாகி விட்டது.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோத்தகிரியை அடுத்த தட்டப்பள்ளம் பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று அப்பகுதியில் முகாமிட்டதுடன் அங்கு வரும் வாகனங்களை சேதபடுத்தி வந்ததால் வாகன ஓட்டிகள் அந்த பகுதிக்கு வரும்போது மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    ஆனால் தற்போது குஞ்சப்பனை சோதனை சாவடியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வனப்பகுதியில் புதிதாக வரத் தொடங்கியுள்ள மற்றொரு இரண்டு காட்டு யானைகள் வாகன ஓட்டிகளை மேலும் அச்சப்படுத்தி வருகிறது.

    இதில் நேற்று இரவு அந்த சாலையில் உலா வந்த யானைகளால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    பின்பு அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றவுடன் போக்குவரத்து சீரானது.

    • 7 காட்டு யானைகள் மலைப்பாதையில் முகாமிட்டு உள்ளன.
    • வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும்.

     குன்னூர்,

    குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் உலா வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சமவெளி பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இதனால் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றன. மேலும் குன்னூரில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளதால், அந்த பழங்களை ருசிக்கவும் யானைகள் முகாமிட்டு உள்ளன. இதற்கிடையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் அடர்லி, ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே உலா வருவதோடு, மலை ரெயிலை வழிமறித்து வருகின்றன. இதனால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை பர்லியார், மரப்பாலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பலா மரங்களில் காய்கள் காய்க்க தொடங்கி உள்ளன. இதன் பழங்கள் யானைகளுக்கு பிடித்த உணவாகும். இதனால் பலா பழங்களை ருசிக்க 7 காட்டு யானைகள் மலைப்பாதையில் முகாமிட்டு உள்ளன. இந்தநிலையில் நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை கே.என்.ஆர்.நகர் அருகே 7 காட்டு யானைகள் உலா வந்தன. இதை பார்த்த வாகன ஓட்டிகள் சற்று தொலைவில் பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்தினர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரம் சாலையோரத்தில் யானைகள் நின்றன. பின்னர் சுமார் ½ மணி நேரம் கழித்து சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் யானைகள் சென்றது. அதன் பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும். யானைகளை புகைப்படம் எடுக்கக்கூடாது. அதனை தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனர்.

    ×