என் மலர்
நீங்கள் தேடியது "விவசாய தோட்டத்தில்"
- தோட்டப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று கடந்த 2 நாட்களாக முகாமிட்டுள்ளது.
- விவசாயிகள் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால் வன விலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய தோட்டத்தில் புகுந்து விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் அந்தியூர் அடுத்த புதுக்காடு கோட்டை மலையான் கோவில் தோட்டப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று கடந்த 2 நாட்களாக முகாமிட்டுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் புகுந்த யானை சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய விளைபொருட்களை மிதித்து சேதப்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இப்பகுதியில் முகாமிட்டு ள்ள யானையை கட்டுப்ப டுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தோட்டத்திற்குள் சிறுத்தையின் கால்தடம் பதிவானதை கண்டு அச்சம் அடைந்தார்.
- கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனப்பகுதி யில் சிறுத்தைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை களை வேட்டை யாடுவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியையொட்டி அமைந்துள்ள சித்தன் குட்டை கிராம த்தை சேர்ந்த ஒரு விவசாயி தனது தோட்டத்தில் வாழை பயிரிட்டு இருந்தார்.
தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி தோட்டத்திற்குள் சிறுத்தையின் கால்தடம் பதிவானதை கண்டு அச்சம் அடைந்தார்.
இதுகுறித்து விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
வனத்துறையினர் சிறுத்தை நடமாடும் பகுதியில் தானியங்கி கேமிரா பொருத்தி கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






