என் மலர்
நீங்கள் தேடியது "farm garden"
- தோட்டப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று கடந்த 2 நாட்களாக முகாமிட்டுள்ளது.
- விவசாயிகள் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால் வன விலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய தோட்டத்தில் புகுந்து விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் அந்தியூர் அடுத்த புதுக்காடு கோட்டை மலையான் கோவில் தோட்டப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று கடந்த 2 நாட்களாக முகாமிட்டுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் புகுந்த யானை சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய விளைபொருட்களை மிதித்து சேதப்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இப்பகுதியில் முகாமிட்டு ள்ள யானையை கட்டுப்ப டுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






