என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலர்களம்"

    • அபிராமம் பகுதியில் உலர்களம் இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    • போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் உள்ள தரைக்குடி, வல்லகுளம் தேவநேரி அச்சங்குளம் உள்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விவசாயிகள் சிறுதானிய பயிர்களை விவசாயம் செய்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மிளகாய் பயிரிட்டனர்.

    இந்த ஆண்டு போதிய பருவமழை இல்லததால் விவசாயிகள் தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டனர். போர்வெல் அமைத்து தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்தனர். இதன் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிளகாய் விளைச்சல் குறைந்துள்ளது. மேலும் போதிய மழை யின்றி செடியிலேயே மிளகாய் சோடையாகி போனது. இதனால் விவசாயிகள் கூலி ஆட்களை வைத்து மிளகாய் பறித்து உலரவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கிராமங்களில் உலர்களங்கள் வசதி இல்லாததால் விவசாயிகள் நிலம், சாலையோரம் கால்வாய் புறம்போக்கு வாய்க்கால்புறம்போக்கு போன்ற இடங்களில் மிளகாய் மற்றும் சிறுதானியங்களை உலர வைக்கின்றனர். உலர்களம் இல்லாமல் மண் தரையில் உளர வைப்பதால் மிளகாயின் தரம் குறைவதால் மிளகாய் விலை குறையும் நிலை உள்ளது.

    இதனால் அபிராமத்திற்கு உள்பட்ட கிராமங்களில் உலர் களங்கள் அமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அமராவதி அணை பாசனத்தின் வாயிலாக நெல் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது.
    • நெல்லை உலர வைத்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகே கல்லாபுரம் மற்றும் சுற்றுப்பகுதியில் அமராவதி அணை பாசனத்தின் வாயிலாக நெல் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது. சீசன் சமயங்களில் அரசு கொள்முதல் மையம் அமைக்கப்படுவதில்லை.எனவே நெல்லை உலர வைத்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் அப்பகுதியில் போதிய உலர்கள வசதியில்லை. விளைநிலங்களிலுள்ள சிறு பாறைகள் மற்றும் இணைப்பு ரோடு பாலங்களில் நெல்லை காய வைக்க வேண்டிய நிலையில் அப்பகுதி விவசாயிகள் உள்ளனர்.

    கல்லாபுரத்தில் நெல்லை காய வைக்க உலர்களமும், இருப்பு வைக்க குடோன் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த அரசுத்துறையினரும் நடவடிக்கை எடுக்காமல் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 

    ×